கலீலியோவின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/5. கை நாடித் துடிப்பால் பெண்டுல

5. கை நாடித் துடிப்பால் பெண்டுல நேரத்தை கணக்கிட்டார்

ஒரு நேரத்தில் கலீலியோ சிறுவனாக இருக்கும்போது பைசா நகரத்துத் தேவாலயத்தில் தொழுகைக்கான வழிபாடுகளைச் செய்தார்.

அவர், இவ்வாறு வழிபாடுகளைச் செய்து வந்த ஒரு நாளன்று இருண்ட நேரமாகி விட்டது. அப்போது ஒரு பணியாள் அந்த தேவாலயத்தின் கூரை மீது தொங்கவிடப்பட்டிருந்த ஒரு விளக்கை தீப ஒளிக்காக ஏற்றினார்.

கலீலியோவுக்கு அந்த பணியாள் செய்த வேலை ஒரு வேடிக்கையாக இருந்தது. அதனால் அவர் அதே விளக்கைத் தனது கைகளாலேயே இழுத்து வேகமாக ஊசலாடவிட்டார்.

அப்போது அந்த ஊசலிலே ஓர் ஆற்புதத்தைப் பார்த்து அதோடு அதில் மறைந்திருந்த ஓர் உண்மையினைக் கண்டுணர்ந்தார். என்ன அந்த உண்மை?

கலீலியோ அந்த தேவாலய விளக்கை இங்கும் அங்குமாக ஆடவிட்டு, அந்த ஊசலாட்டத்தில் அவர் கண்ட உட்பொருனைத் தேட முயன்று ஆராய்ச்சி செய்த காலம் இருக்கிறதே, அந்தக் காலம் வரை, கடிகாரத்தின் தற்போது ஆடிக்கோண்டிருக்கிறதே ஒரு தொங்கல், அதாவது பெண்டுலம் என்று பெயர் பெற்றுள்ள ஒரு பொருள், அதையாரும் கண்டுபிடிக்காத காலமாகும்.

தினந்தோறும் கலீலியோ அந்த தேவாலயத்தின் வழிபாடுகளுக்காக வரும்போதெல்லாம், அங்கு நடைபெறும் உருக்கமான தொழுகையையும் கூடி கவனிக்காமல், பிரார்த்தனைக்கு முன்னும் பின்னும் அவர் அந்த விளக்கினையே ஊசலாட விட்டு: அந்த ஆட்டத்திலேயே தனது முழுக்கவனத்தையும் செலுத்தி மூழ்கிக் கிடந்தார்.

விளக்கு ஆரம்பத்தில் அதிக நேரம் ஆப்படியும் இப்படியுமாக அதிக நீளமாக ஊசலாடியது. பிறகு, அதன் வேகம் குறையக குறைய ஊசலாட்டம் மெதுவாகக் குறைந்துவந்தது.

ஊசல் குறைந்து வந்த காலத்தை உற்றுப்பார்த்தனர். ஏனென்றால், காலத்தைத் துல்லியமாக கணக்கிடத்தக்கக் கூடிய கடிகாரமோ, கருவியோ அன்றுவரை கண்டு பிடிக்கப்படாத காலமாகும்.

அதனால்,கலீலியோ அந்தக் குறைந்து வந்த காலத்தை அவர் உற்று உற்றுப் பர்த்தார்! ஊசலின் நேரத்தைக் கணக்கிடத் தக்கதொரு வழியைக் கண்டு பிடித்தால் என்ன என்ற ஆர்வம் அவருக்கு ஏற்பட்டதால்தான், அந்த ஊசலின் குறைவான நேரத்தை உற்றுப் பார்த்து ஒரு புதிய ஆய்வை அவர் மேற்கென்னலானார்.

அதாவது, அவர் தனது கைவிரலால் தம் நாடித் துடிப்பைக் கணக்கிட்டு, ஊசலின் குறைான ஆட்ட நேரத்தைக் கணக்கிட்டுப் பார்த்தார். இவ்வாறு ஒரு முறையல்ல; பலமுறை சோதனை செய்தார்!

ஊசலின் ஆட்டத்தூரம் நீண்டதனாலும், குறுகிய தானாலும், விளக்கு எடுத்துக் கொள்கிற ஊசல் நேரம் ஒன்றேதான் என்பதைத் தனது நாடித்துடிப்பின் கணக்கு மூலம் அவர் கண்டுபிடித்தார்! அவருக்கே அவரது அரிய செயல் ஒரு வியப்பாக அமைந்துவிட்டது.

சுவற்றில் மாட்டிடும் கடிகாரம் இல்லாத அந்தக் காலத்தில், தேவாலய விளக்கை அலைய விட்டு அலைய விட்டுத் தன்னுடைக் கைகளின் நாடித்துடிப்புக்களைக் கணக்கு வைத்துக் கொண்டு, அதைக்கணக்கிட்டுக் கணக்கிட்டு, ஊசலின் தூரம் ஆரம்பத்தில் ஏற்படுகின்ற அதிக நீளமுடையதானாலும் ஆல்லது நின்று போகக் கூடியக் காலத்தில், ஊசலாடிடும் மிகக் குறுகிய நிலையையுடையந்தாலும், அதன் ஊசல்நோம் ஒன்றே என்று உறுதியாகக் கண்டு மகிழ்ச்சியடைந்த செயல் செயற்கரிய செயலாக இருத்தது!

இந்த முதல் பெண்டுலம் ஆய்வை, ஊசல் நேரத்தை, தொங்கல் ஓட்டக் கணக்கைக் கண்டு பிடித்துக்காட்டிய போது அவருக்கு என்ன வயது தெரியுமா? பத்தொன்பதே வயது பல்கலைக்கழகக் கல்விகற்கும் கல்வி வயதுதான் என்றால் வியப்படையாதவர் யார்?

கலீலியோ, அவர் கண்டு பிடித்த உண்மையினைத் தோடர்ந்து தனது வீட்டிலேயே பல சோதனைகள் மூலமாக திரும்பத் திரும்பச் செய்து பார்த்தார்! இன்று "பென்டுலம் என்று ஆங்கிலத்தில் கூறப்படும் ஊசல் விளக்கின் தத்துவத்தினை உலகில் முதன் முதல் கண்டுபிடித்த விஞ்ஞானி இவரே ஆவார்.

அத்துடன் விட்டு விடவில்லை அந்த ஊசல் விளக்கின் தத்துவத்தை தொடர்ந்து ஆராய்ந்து கொண்டே இருந்தார்.

ஊசலின் அலைவு நேரத்தை அவர் கணக்கிட்ட்தைப் போலவே அதற்கு இவரது நாடித்துடிப்புகள் பயன்பட்டதைப் போலவே, மற்றும் ஓர் அதன் தொடர்பான ஆராய்ச்சியிலே அவர் ஈடுபட்டார். அந்த ஆராய்ச்சி என்ன தெரியுமா?

தனது நாடித் துடிப்பைக் கொண்டு அல்லவா ஊசல் விளக்கின் கால அளவை ஆராய்ந்தார்! இப்போது, எந்த தாடித்துடிப்பால் ஊசல் காலத்தை ஆராய்ந்தாரோ, அந்த நாடித்துடிப்பையே இப்போது ஆராய்ச்சி செய்ய முற்பட்டார்.

அந்த ஆராய்ச்சியின் பயனாலே, நாடித்துடிப்பின் விகிதத்தைக் கணக்கிட்டுக் கூறுவதற்குரிய ஒரு கருவியினைக் கண்டு பிடிக்க விரும்பி, ஆதையும் தனது அயராத சோதனைகளால் கண்டு பிடித்தார்.

ஆந்தக் கருவி கண்டுபிடிக்கப்பட்ட விவரங்கனைக் கலீலியோ தமது பேராசிரியமோர்களிடம் தெரிவித்தபோது, அதைக் கேட்ட ஆலர்களும் மகிழ்ச்சியடைந்தது மட்டுமல்லாது, விப்பும் அடைந்தார்கள்!

நாடித்துடிப்புக்கான விகிதத்தைக் கண்டறிந்த பின்பு, அதன் தொடர் ஆராய்ச்சியாக, ஒரு நோயாளியின் இருதயத் துடிப்பையும் கண்டிறியலாம் போல இருக்கிறதே என்று சிந்தித்த கலீலியோ, அதற்கான ஆராய்ச்சியில் ஈடுபட்டு ஒரு கருவியினையும் கண்டுபிடித்தார்.

அவர் இவ்வாறு கண்டுபிடித்தக் கருவியின் பெயர் தான், இன்றைய டாக்டர்கள் தங்களது அன்றாட வாழ்க்கையில் நோயாளிகளின் இருதயத் துடிப்புகளைக் கண்டறியும் 'ஸ்டெத்தஸ் கோப்' என்ற கருவியாகும்.

ஒவ்வொரு டாக்டர்களும் இன்று அதனை அவரவர்கள் கழுத்தில் மாட்டிக் கொண்டு, இதயத்துடிப்புகளை உணர்ந்த பின்பு அதை டாக்டர் என்ற அடையாளத்திற்காகவும் பயன்படுத்திக் கொள்வதை நாம் பார்க்கின்றோம்.

மாமனிதர் கலீலியோ கண்டு பிடித்துக் கூறிய பெண்டுலம் தத்துவம் விதி, இன்று எண்ணற்ற வகையில் மக்களுக்குப் பயன்பட்டு வருவதை நாம் பார்க்கின்றோம்! இதல்லவா செயற்கரிய சாதனை!

கலீலியோவின் தந்தையாருக்கு மகன் மருத்துவத்துறையிலே ஈடுபட்டு உலகம் போற்றும் மருத்துவ மேதையாக வேண்டும் என்ற ஆசை! அதனால், அவர் ஒரு டாக்டர் படிக்க வேண்டிய கல்வி எதுவோ அதிலே அவரைச்சேர்ந்து பட்டம் பெற்றிட வேண்டியதற்கான எல்லா ஏற்பாடுகனையும் அவர் செய்தார்.

வாலிபரான கலீலியோவுக்கு உள்ள ஆசை அதுவன்று, வடிவக் கணிதத்தை வரைவதிலேயே தனது முழு தேரத்தையும் செலவழித்து, அந்தத் துறையிலே அவர் ஈடுபட்டுவந்தார்.

ஆனால், அவரது தந்தையார் மகனின் கணிதக் கல்வி படிப்புக்கு இடையூறாக இருந்தார். அதனால் தனது மகனுக்கு யார் கணித ஆசிரியர் என்பதை அவர் விசாரித்தபோது, அந்த ஆசிரியர் தனக்கு மிக நெருங்கிய நண்பர் என்பதை அறிந்தார்.

உடனே தனது நண்பரில் ஒருவர் அங்குப் பேராசிரியராகப் பணியாற்றுவதால், அந்தப் பைசா பல்கலைக் கழகத்துக்குச் சென்றார். பேராசிரியர் ஆஃச் டில்வியோ ரிக்கி என்ற தனது நண்பரைக் கண்டு, கலீலியோ கற்கும் கணிதக் கல்வியிலே இருத்து அவரை மருத்துவப் படிப்பு படிக்குமாறு தூண்டும்படியும், மருத்துவத்துறைக்கு அவரை மாற்றவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

ஆனால், கலீலியோவுக்கு கடுகளவும் மருத்துவத்துறை பிடிக்கவில்லை; அதே வேளையில் தமது தந்தையின் ஆசையையும் தம்மால் புறக்கணிக்க முடியாதபடித் தத்தளித்தார்!

தந்தையாருக்குத் தெரியாமல் தான் கற்கும் மருத்துவ நூல்களுக்கு அடியில் கணித நூற்களையும் மறைவாக வைத்துக் கொண்டு படித்து வந்தார்; ஆராய்ச்சியும் செய்துவந்தார்.

இந்த போக்கைப் புரிந்து கொண்ட கலீலியோவின், தந்தை, மகனின் மனநிலைக்கு மாறாக நடக்க மனம் வராததால், மகன் போக்குக்கே அவரது கல்வி விருப்பத்தை அவர் விட்டு விட்டார்.

இந்த நேரத்தில் கிரேக்கக் கணித மேதையாக கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் வாழ்ந்த தத்துவ விஞ்ஞானி ஆர்க்கிமிடீஸ் கண்டு பிடித்திருந்த புனல் நிலைத்தத்துவத்தைப் பற்றி கலீலியோ ஓர் ஆய்வுக் கட்டுரை எழுதி இருந்தார்.

அந்த கட்டுரையைப் படித்துப் பார்த்த மற்றக் கணித வல்லுநர்கள். அவருக்கு அத்துறையில் இருந்த புலமையைக் கண்டு ஆச்சரியப்பட்டு, அவருக்குள்ள கணித ஆர்வத்தையும், அறிவு நுட்பத்தையும் பாராட்டி வெகுவாகப் புகழ்ந்தார்கள்.

இதன் விளைவாக அவர், 1889-ம் ஆண்டில், எந்தப் பல்கலைக் கழகத்தில் அவர் கணித மாணவனாக இருந்து இவ்வளவு திறனாளராக ஆனாரோ, அதே பல்கலைக் கழகத்தில் கணிதப் பேராசிரியரானார். அப்போது அவருக்கு வயது இருபத்தைந்தே. இவ்வளவு சிறிய வயதில் அவர் கணிதத்துறைப் பேராசிரியர் ஆனது இந்தப் பல்கலைக்கழகத்திற்கே ஒரு பெருமையாக அமைந்தது.