கலைக்களஞ்சியம்/அகத்தியம்

அகத்தியம் அகத்தியர் செய்த இலக்கண நூல். அது மூன்று சங்கங்களின் காலத்துக்கும் இலக்கண நூலாக இருந்தது. அது மிகவும் விரிவான நூலென்றும் அதில் எழுத்து, செல், பொருள், யாப்பு, சந்தம், வழக்கியல், அரசியல், அமைச்சியல், பார்பன வியல், சோதிடம், கந்தருவம், கூத்து, என்பனவும் பிறவும் கூறப்பட்டிருந்தன என்றும் காண்கிறது. இந்த நூல் இப்பொழுது இல்லை. தொல்காப்பியம்இளம்பூரணர் உரை, இலக்கண விளக்கவுரை, நன்னூல் விருத்தியுரை, வேகிரி முதலியார் எழுதிய இலக்கணக் களஞ்சியம் இவற்றில் சிற்சில சூத்திரங்கள் அகத்தியத்திலிருந்து எடுத்தவை எனக் காட்டப்பட்டிருக்கின்றன. பார்க்க: - அகத்தியர்.