கலைக்களஞ்சியம்/அகப்பேய்ச் சித்தர்

அகப்பேய்ச் சித்தர் பதினெண் சித்தர் என்று தமிழ் நாட்டில் வழங்கிவருபவர்களுள் ஒருவர். மற்றச் சித்தர்களைப் போலவே இவரும் தத்துவ ஞானத்தை ஒட்டுவமை உருவத்தில் பாடியுள்ளார். இவர் செய்யுள் ஒவ்வொன்றின் இறுதியிலும் அகப்பேய் என்னும் விளி காணப்படுவதால் இப்பெயர் பெற்றனர்போலும். பார்க்க: சித்தர்கள்