கலைக்களஞ்சியம்/அகப்பொருள் விளக்கம்

அகப்பொருள் விளக்கம் 12-ஆம் நூற்றாண்டின் இறுதியிலே தொண்டை நாட்டிலே புளிங்கு என்னும் ஊரிலே பிறந்தவரான நாற்கவிராச நம்பி என்பவரால் எழுதப்பட்டது. இவருடைய தந்தை உய்யவந்தார், சைனர்; குலசேகர பாண்டியன் காலத்தவர். இந்நூல் தொல்காப்பியம், பன்னிருபடலம் என்னும் நூல்களைப் பின்பற்றி எழுதப்பெற்ற சிறந்த அகப் பொருளிலக்கண நூல், இதற்கு இலக்கியமாக விளங்குவது தஞ்சைவாணன் கோவை.