கலைக்களஞ்சியம்/அஜின்கோர்ட் போர்

அஜின்கோர்ட் போர்: வடபிரான்சிலுள்ள அஜின் கோர்ட்டில் 1415-ல் ஆங்கிலேயருக்கும் பிரெஞ்சுக்காரருக்கும் பெரும்போர் நடந்தது. ஆங்கில அரசனான V-ம் ஹென்ரி பிரான்சில் படையோடு இறங்கிக் கலேயைக் கைப்பற்றும் எண்ணத்தோடு அந்நகரை நோக்கிச் சென்றான். அஜின் கோர்ட்டில் இடைமறித்த பெரிய பிரெஞ்சுப் படையை ஆங்கிலேயப் படைகள் எளிதில் தோற்கடித்தன.