கலைக்களஞ்சியம்/அஞ்செங்கோ

அஞ்செங்கோ : அஞ்சு தெங்கு என்பதன்‌ சிதைவு. திருவிதாங்‌கூரில்‌ கன்னியாகுமரியிலிருந்து 79 மைலில்‌ உள்ளது. இப்போது மீன்பிடிக்கும்‌ கிராமம்‌. இந்தியாவில்‌ ஆங்கிலேயர்‌ முதன்‌ முதல்‌ ஏற்படுத்‌திய குடியிருப்புக்களுள்‌ ஒன்‌று. அவர்கள்‌ கோட்டையும்‌ பண்டகசாலையும்‌ கட்டியிருந்தனர்‌. இப்போது அவை சிதைந்து கிடக்கின்‌றன.