கலைக்களஞ்சியம்/அஞ்சிலாந்தையார்‌

அஞ்சிலாந்தையார்‌ : சங்ககாலப்‌ புலவர்‌. அஞ்‌சியாந்தையார்‌ என்றும்‌ இவர்‌ பெயர்‌ காணப்படுறது. அஞ்சில்‌ என்னும்‌ ஊரினர்‌. ஆதன்‌ தந்‌தை ஆந்தை என மருவும்‌. ஆந்தையாரெனும்‌ பெயரினர்‌ பலர்‌ காணப்பட்டதால்‌ இவர்‌ அஞ்சில்‌ ஆந்தையார்‌ என ஊர்ப்பெயருடன்‌ இணைக்கப்‌ பெற்றார்‌. இவர்‌ பாடிய செய்யுட்கள்‌ 2.(நற்‌. 233; குறுமந். 294).