கலைக்களஞ்சியம்/அடையாறு

அடையாறு சென்னையின் தென்பகுதியிலுள்ள ஒரு சுற்றுப்பட்டு. அடையாறு என்னும் ஆறு கடலோடு கலக்குமிடத்தில் அமைந்துள்ளதால் இதற்கு அடையாறென்றே பெயர் அமைந்தது. 1747-ல் இவ்விடத்தில் பிரெஞ்சுக்காரருக்கும் ஆர்க்காட்டு நவாபிற்கும் நடந்த போரில் பிரெஞ்சுக்காரர் வெற்றியடைந்தனர். பிரம்மஞான சபையாரின் உலகத் தலைமைக் காரியாலயம் இங்கே இருக்கிறது. அடையாற்றின் கரையில் உள்ள பெரிய ஆலமரம் உருவில் மிகப் பெரிதாயிருப்பது பற்றி உலகப்புகழ் பெற்றது.

"https://ta.wikisource.org/w/index.php?title=கலைக்களஞ்சியம்/அடையாறு&oldid=1453718" இலிருந்து மீள்விக்கப்பட்டது