கலைக்களஞ்சியம்/அபனேந்திரநாத தாகூர், டாக்டர்

அபனேந்திரநாத தாகூர், டாக்டர் (1871-1951) கல்கத்தாவில் பிறந்து. முதலில் சமஸ்கிருத கல்லூரியிலும், பின்னர் சேவியர் கல்லூரியிலும் கல்வி பயின்றார்; சிறு வயதிலேயே சித்திரங்கள் வரைந்தார்; சிறு குழந்தைகட்குக் கதைகள் புனைவதில் விருப்பம் உடையவர்; பேர்பெற்ற ஆங்கில, இத்தாலிய ஓவியர்களிடம் ஓவியப் பயிற்சி பெற்றார் ; நீரோவியம் தீட்டுவதே முக்கியத்தொழிலாகக் கொண்டார்; நாற்பதாவது வயதில் ஹேவல் என்பவருடன் சேர்ந்து இந்திய ஓவிய மறுமலர்ச்சிக்கு அடி கோலினார்; தமது சகோதரர் ககனேந்திரநாதருடன் சேர்ந்து,கீழ் நாட்டுக் கலை இந்திய சங்கத்தை நிறுவினார்; கலையைப்பற்றிப் பல நூல்கள் இயற்றியுள்ளார்; ரவீந்திரநாத தாகூர் இறந்த பின், 1942-7-ல் விசுவபார தியில் ஆசிரியராக இருந்தார்.

ரவீந்திரநாத தாகூர் கவிதையில் சிறந்திருந்தது போல் இவர் கலையில் சிறந்திருந்தார். இருவரும் இந்தியப்

அபனேந்திரநாத தாகூர்

பண்பாட்டு வரலாற்றில் முக்கிய ஸ்தானம் வகிக்கின்றனர். இவருடைய வர்ண அமைப்பு இணையற்றது. இவர் மேனாட்டு முறைகளைத் தழுவின போதிலும், இந்திய விஷயங்களை இந்திய உருவத்திலேயே சித்திரித்துளர்; சிறு ஓவியத்திலேயே பிரமாண்டமான விளைவைக் காட்டும் திறமையுடையவர் என்பதை இவருடைய பிரயாணத்தின் முடிவு என்னும் ஓவியத்தில் காணலாம். இவருடைய ஓவியங்கள் ஆன்மாவுக்கு இன்பம் அளிப்பன. தே. பி. ரா. சௌ.