கலைக்களஞ்சியம்/அப்துல் ரஹீம்கான் கானா

அப்துல் ரஹீம்கான் கானா (ரஹீம்) (பி. 1553) ஜஹாங்கீரின் தளபதிகளில் ஒருவர். இவர் இந்தியில் நூல்கள் இயற்றியுள்ளார்; சமஸ்கிருதம், பார்சி, அரபு ஆகிய மொழிகளில் சிறந்த புலமை வாய்ந்தவர்; இலக்கியத் திறனாய்விலும் வல்லுநர். பாரவை நாயக பேத், மதனாஸ்தக முதலியவை இவர் எழுதிய நூல்கள் இவர் எழுதிய தோஹாஸ் என்னும் கண்ணிகள் பெரிதும் போற்றப்படுகின்றன. பி. வெ.