கலைக்களஞ்சியம்/அப்பாலும் அடிச்சார்ந்தார்

அப்பாலும் அடிச்சார்ந்தார் தமிழ் நாட்டுக்கு அப்பாற்பட்ட நாடுகளிலுள்ள சிவனடியார்களும், சுந்தர மூர்த்தி நாயனார் திருத்தொண்டத் தொகையில் கூறும் அடியார்கள் காலத்துக்கு முன்னும் பின்னும் சிவனடியைச் சார்ந்தவர்களுமாவர் (பெரிய புராணம்).