கலைக்களஞ்சியம்/அப்பூதி அடிகள்

அப்பூதி அடிகள் சோழ நாட்டில் திங்களூரிலிருந்த அந்தணர்; நேரில் காணு முன்னரே அப்பரை ஆசாரியரெனக் கொண்டு, அவர் பெயரில் அறம் புரிந்தும், தம் பிள்ளை இறந்து கிடந்ததையும் மறைத்து அப்பருக்கு அமுதளித்தும் முத்தி பெற்றவர் ; பெரிய புராணம் கூறும் அறுபத்து மூன்று நாயன்மாருள் ஒருவர்.