கலைக்களஞ்சியம்/அமர்நீதி நாயனார்

அமர்நீதி நாயனார் அறுபத்து மூன்று நாயன்மாருள் ஒருவர்; சோழ நாட்டில் பழையாறையிலிருந்த வணிகர். சிவனடியார் தந்த கோவணத்துக்கு நிறையாக தம் மனைவியோடும் மகனோடும் துலை புக்கு அர்ப்பித்து முத்தி பெற்றவர்.