கலைக்களஞ்சியம்/அமீர் அலி

அமீர் அலி (1849-1928) பேர் பெற்ற இந்தியச் சட்டவியல் அறிஞர். பிரிவி கவுன்சில் நீதிபதியாக நியமனம் பெற்ற முதல் இந்தியர் (1909). முகம்மது நபி வமிசத்தினர் என்பர். பாரிஸ்டர் பட்டம் பெற்றவர். உயர் நீதிமன்றத்தின் முதல் முஸ்லிம் நீதிபதி. இஸ்லாம் குறித்து இவர் எழுதிய நூல்கள் சிறந்தவை. அவை ஆங்கில இலக்கியத்தில் இடம் பெற்றுள்ளன. இந்திய முஸ்லிம்களின் முன்னேற்றத்துக்காக உழைத்தவர். 1904லிருந்து இவர் இங்கிலாந்திலேயே நிரந்தரமாகத் தங்கிவிட்டார்.