கலைக்களஞ்சியம்/அம்பலவாண பண்டிதர்

அம்பலவாண பண்டிதர் யாழ்ப்பாணத்தில் தெல்லிப்பழை என்னும் ஊரினர் ; 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்தவர். தந்தையார் கோப்பாய் அருளம்பல முதலியார் ஆவர்; சிறந்த வாக்கு வன்மையும் கல்விச்சிறப்பும் உடையவர்; சி. வை. தாமோதரம் பிள்ளையவர்களாற் பாராட்டப் பெற்றவர். சேனாதிராயர் பாடிய நல்லை வெண்பா, நீராவிக் கலிவெண்பா என்னும் நூல்களை ஆராய்ந்து அச்சிட்டவர்.