கலைக்களஞ்சியம்/அயினி அக்பரி

அயினி அக்பரி அக்பர் அவையிலிருந்த அபுல்பசல் (த.க.) என்னும் அறிஞரால் இயற்றப்பட்ட ஒரு நூல். அவர் இயற்றிய அக்பர்நாமா (த.க.) என்னும் நூல் அக்பருடைய குடும்பத்தைப் பற்றியும், பண்புகளைப் பற்றியும் விவரித்துக் கூறுவதுபோல, இந்நூல் அக்பருடைய ஆட்சி முறையையும், அவ்வரசன் ஆட்சியில் நாடு இருந்த நிலையையும் பற்றி விரிவாகக் கூறுகிறது. இது மூன்று பாகங்கள் அடங்கியது. நூலால் சுமார் 350 ஆண்டுகளுக்குமுன் வட இந்தியாவின் அரசியல், சமூக நிலைகளைப் பற்றி அறிந்துகொள்ள முடிகிறது. வட இந்திய வரலாற்று ஆதார நூல்களில் ஒன்றாக இதைக் கருதலாம்.