கலைக்களஞ்சியம்/அரதத்தாசாரியார்

அரதத்தாசாரியார் சோழநாட்டில் கஞ்சபுரத்திருந்த மதுசூதனாசாரியார் மகனார். தந்தை வைணவராயினும் இவர் சிவபக்தர். இவர் வைணவரோடு வாதம் செய்து வென்றதால் தந்தையும் சிவபக்தராயினர். சதுர்வேதசாரம், தத்துவ நிரூபணம், அரியர தாரதம்மியம் முதலிய பல நூல்கள் இயற்றியுள்ளார்.