கலைக்களஞ்சியம்/அரதைப் பெரும்பாழி

அரதைப் பெரும்பாழி அரித்துவார மங்கலமென்று வழங்குகிறது. தஞ்சாவூர் மாவட்டத்தில் சாலியமங்கலம் புகைவண்டி நிலையத்திற்கு வடக்கே 2½ மைல் சென்று கிழக்கே திரும்பி 4 மைல் போனால் அவளிவணல்லூர் சேரலாம். இன்னும் 1 மைல் கிழக்கே போனால் இந்தத் தலத்தை அடையலாம். கோயிலின் பெயர் பெரும்பாழி. சுவாமி பாதாளேசுவரர். அம்மன் அலங்கார நாயகி. இத்தலம் திருஞானசம்பந்தர் பாடல் பெற்றது.