கலைக்களஞ்சியம்/அருவாளர்

அருவாளர் கொள்ளிடத்தின் வடக்கேயுள்ள அருவாநாட்டிலும் (தென்னார்க்காடு மாவட்டம்) அருவாவடதலை நாட்டிலும் (செங்கற்பட்டு மாவட்டம்) இருந்த பழங் குடிகள். இவர்களை அகத்தியர் வடநாட்டிலிருந்து கொண்டுவந்து இங்கே குடியேற்றியதாகத் தொல்காப்பியப் பாயிரம் கூறும். இவர்களைக் கரிகாலன் வென்று இங்கே சோழராச்சியத்தை அமைத்தான் என்பர்.