கலைக்களஞ்சியம்/அறவண அடிகள்‌

அறவண அடிகள்‌ காவிரிப்பூம்‌ பட்டினத்திலிருந்த பெளத்த சங்க முனிவர்‌. கோவலன்‌ கொலையுண்‌.டது கேட்டுத்‌ துறவு பூண்ட மாதவிக்குத்‌ தருமோபதேசம்‌ செய்தார்‌ ; மணிமேகலைக்கு அமுதசுரபியின்‌ பெருமை கூறினார்‌; காவிரிப்பூம்பட்டினம்‌ கடல்கொண்ட பிறகு காஞ்சி நகரம்‌ சென்று தவம்‌ செய்தார்‌ என்று மணிமேகலை கூறும்‌.