கலைக்களஞ்சியம்/அலகாபாத்

அலகாபாத் இந்தியாவின் புண்ணியத் தலங்களில் ஒன்று. அலகாபாத் என்பதன் பொருள் கடவுளின் நகரம் என்பதாம். அது அக்பர் இட்ட பெயர். அதற்குப் பிரயாகை என்பது பழைய பெயர். அது கங்கையும் யமுனையும் கூடுமிடத்தில் கி. மு. 200-ல் அமைக்கப் பெற்றது. அங்கு அக்பர் கட்டிய கோட்டையும் அரண்மனையும், ஜம்மா மசூதியும் புகழ் வாய்ந்தவை. கோட்டையினுள் வாயிலருகே உள்ள அசோகர் தூண் 35 அடி உயரம். அதில் அசோகர் கட்டளைகளும். சமுத்திரகுப்தருடைய வெற்றிகளும் பொறிக்கப்பட்டுள. சர்க்கரை, பருத்தி வியாபாரம் மிகுதி. ஆண்டுதோறும் நடைபெறும் கும்பமேள விழாவுக்கு இலட்சம் மக்கள் வந்து, நதிகள் கூடுமிடத்தில் நீராடுவார்கள். இந்நகரம் உத்தரப் பிரதேச இராச்சியத்தில் உள்ளது. பல்கலைக் கழகமும் உயர் நீதிமன்ற மும் உள. மக்: 3,22,295 (1951).