கலைக்களஞ்சியம்/அழிசி நச்சாத்தனார்

அழிசி நச்சாத்தனார் சங்ககாலப் புலவர். அழிசி என்பது ஊரா அல்லது தந்தையின் பெயரா என்பது விளங்கவில்லை. (அழிசி என ஒருவன் ஆர்க்காட்டை ஆண்டானென்று தெரிகிறது) 'ந' என்பது சிறப்பைக் குறிக்கும் எழுத்து. சாத்தனார் என்பது பெயர். (குறுந். 271).