கலைக்களஞ்சியம்/அஸ்ஸே

அஸ்ஸே ஐதராபாத் இராச்சியத்திலுள்ள வரலாற்றுப் புகழ்பெற்ற சிற்றூர். இங்கு 1803 செப்டம்பர் 23ஆம் தேதி பான்சலே, சிந்தியா ஆகிய மகாராஷ்டிர அரசர்களுடைய கூட்டுச் சேனைக்கும் ஜெனரல் வெல்லெஸ்லி என்ற வெல்லிங்டன் பிரபுவின் தலைமையின் கீழ் இருந்த பிரிட்டிஷ் சேனைக்கும் பெரும்போர் நடைபெற்றது. இதில் மகாராஷ்டிரச் சேனை தோல்விஅடைந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=கலைக்களஞ்சியம்/அஸ்ஸே&oldid=1455981" இலிருந்து மீள்விக்கப்பட்டது