கலைக்களஞ்சியம்/ஆதிச்சநல்லூர்

ஆதிச்சநல்லூர்: இதை வேலூர் ஆதிச்சநல்லூர் என்றும் கூறுவர். இது திருநெல்வேலி மாவட்டத்தில் திருச்செந்தூர்க்குப் போகும் வழியில் பாளையங்கோட்டையிலிருந்து பதினோராவது மைலில் உளது. தொல்பொருள் ஆராய்ச்சி முக்கியத்துவம் உடையது. இவ்வூருக்கு மேற்கேயுள்ள மேட்டில் பண்டைக்காலப்பொருள்கள் பல வெட்டி எடுக்கப்பெற்றுச் சென்னைப்

ஆதிச்சநல்லூரில் காணப்படும் புதை பொருட் பகுதி
உதவி : தொல் பொருள் இலாகா.சென்னை.

ஆதிச்சநல்லூரில் கிடைத்த வெண்கலப் பொருள்
(இப்பொழுது சென்னைப் பொருட்காட்சிச்சாலையில் உள்ளது)
உதவி: தொல் பொருள் இலாகா, சென்னை.

பொருட்காட்சிச் சாலையில் வைக்கப்பட்டுள்ளன. முதன் முதல் 1876-ல் அகழ்ந்து ஆராய்ச்சி செய்த ஜெர்மன் புலவர் டாக்டர் ஜாகர் பல பொருள்களைப் பெர்லினுக்குக் கொண்டுபோனார். பார்க்க: தமிழர்