கலைக்களஞ்சியம்/ஆதிச்சநல்லூர்
ஆதிச்சநல்லூர்: இதை வேலூர் ஆதிச்சநல்லூர் என்றும் கூறுவர். இது திருநெல்வேலி மாவட்டத்தில் திருச்செந்தூர்க்குப் போகும் வழியில் பாளையங்கோட்டையிலிருந்து பதினோராவது மைலில் உளது. தொல்பொருள் ஆராய்ச்சி முக்கியத்துவம் உடையது. இவ்வூருக்கு மேற்கேயுள்ள மேட்டில் பண்டைக்காலப்பொருள்கள் பல வெட்டி எடுக்கப்பெற்றுச் சென்னைப்
![](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/6/64/Vasi_funebri_con_parti_figurate_sul_coperchio%2C_dalle_colline_di_nilgiri%2C_tamil_nadu%2C_300_ac-300_dc_ca._01.jpg/220px-Vasi_funebri_con_parti_figurate_sul_coperchio%2C_dalle_colline_di_nilgiri%2C_tamil_nadu%2C_300_ac-300_dc_ca._01.jpg)
ஆதிச்சநல்லூரில் கிடைத்த வெண்கலப் பொருள்
(இப்பொழுது சென்னைப் பொருட்காட்சிச்சாலையில் உள்ளது)
உதவி: தொல் பொருள் இலாகா, சென்னை.
(இப்பொழுது சென்னைப் பொருட்காட்சிச்சாலையில் உள்ளது)
உதவி: தொல் பொருள் இலாகா, சென்னை.
பொருட்காட்சிச் சாலையில் வைக்கப்பட்டுள்ளன. முதன் முதல் 1876-ல் அகழ்ந்து ஆராய்ச்சி செய்த ஜெர்மன் புலவர் டாக்டர் ஜாகர் பல பொருள்களைப் பெர்லினுக்குக் கொண்டுபோனார். பார்க்க: தமிழர்