கலைக்களஞ்சியம்/ஆதிமந்தி

ஆதிமந்தி திருமாவளவன் எனச் சிறந்த கரிகாற் சோழன் மகள். சேரநாட்டரசன் ஆட்டனத்தியின் மனைவி. ஆட்டனத்தியைக் காவிரி கொண்டு செல்லக் கூவியரற்றிச் சென்றாள். மருதி என்பவளால் அவன் கரை சேர்க்கப்பட்டதையறிந்து அவனையடைந்தாள். இவள் பாடியது குறுந். 3; இவளது வரலாற்றை அகம் 45,76,222, 236, 276, 396-ல் அறியலாம்.