கலைக்களஞ்சியம்/ஆரியங்காவு

ஆரியங்காவு திருவிதாங்கூரில் செங்கோட்டைத் தாலுகாவில் திருநெல்வேலியிலிருந்து ஐம்பதாவது மைலில், திருநெல்வேலி கொல்லம் இருப்புப் பாதையில் மலைக் கணவாயில் உள்ளது. கணவாய் 18 மைல் நீளமும் பார்க்க அழகிய காட்சிகளும் உடையது. காப்பி, தேயிலைத் தோட்டங்களும் பரசுராமர் கட்டியதாகச் சொல்லப்படும் சாஸ்தா கோயிலும் உள்ளன.