கலைக்களஞ்சியம்/இடங்கழிநாயனார்

இடங்கழிநாயனார் சோழநாட்டில் கோனாட்டைச் சேர்ந்த கொடும்பாவூரிலிருந்த அரசர். வேளிர் குலத்தவர். சிவன் கோயிலைச் செம்மையாய்ப் பரிபாலித்தவர். சிவனடியாருக்கு அமுது செய்விப்பதற்காக வறிஞரான சிவனடியார் ஒருவர் தம் அரண்மனையிலிருந்த நெல்லைத் திருடியபோது அவருக்கு மேலும் நெல்லும் பொன்னும் கொடுத்து முத்தி பெற்றவர்; பெரிய புராணம் கூறும் அறுபத்து மூன்று நாயன்மாரில் ஒருவர்.