குடும்பப் பழமொழிகள்/நோய்

நோய்

கோழிக்கு ஊசிப்புண் போதும். - இந்தியா

எப்பொழுதும் நோயுள்ளவனுக்குப் பெயர் ஆரோக்கியசாமி.
-( , ,)

முதல் சாமத்தில் எல்லோரும் விழித்திருப்பர், இரண்டாவதில் போகி விழித்திருப்பான். மூன்றாவதில் திருடன் விழித்திருப்பான், நான் காவதில் நோயாளி விழித்திருப்பான். -( , ,)

நோய் வந்து விட்டால் எந்த வைத்தியரையாவது அழை.

-சீனா

வெளிச்சம் வருகிற சாளரத்தை அடைத்தல் வைத்தியர் வருவதற்குக் கதவைத் திறத்தலாகும். -( , ,)

வயிற்றுப் பக்கம் நோயில்லையானால் நோயாளி இறக்க மாட்டான். -( , ,)

கால் வலியை மறக்கலாம், தலைவலியை மறக்க முடியாது.
-ஆர்மீனியா

நோய் குணமாகாது என்று தெரிந்தால் இருக்கிற மருந்தை ஒருவன் வீணாக்கமாட்டான். -ஜெர்மனி

நோயே ஒரு வைத்தியன். -( , ,)

நோயைப் போற்றி வைப்பவனிடம் அது உறவு கொண்டாடும். -( , ,)

நோயாளியிடம் பணம் இருப்பதற்குத் தக்கபடி பிணி நீடிக்கும். -( , ,)

உடலுக்கு நோய் வந்தால், மனத்திற்கு வந்து விடும்.

-போஸ்னியா

நோயின் தந்தை எவனாயிருந்தாலும், தாய் உணவுக் கோளாறுதான். - இங்கிலாந்து

'ஆஸ்துமா' வந்தவர் நெடுநாள் வாழ்வர். -அயர்லந்து

முகத்தில் ஒரு பரு வந்து விட்டால் உடலுக்குள் சயித்தான் புகுந்த மாதிரி. -( , ,)

ஒவ்வொரு பிணியும் ஒரு வைத்தியன். -( , ,)

நீடித்த நோய்களுக்குப் பொறுமைதான் மருந்து. -( , ,)

வரட்சியான இருமல் வந்து விட்டால், எல்லா நோய்களும் தீர்ந்து விடும். - வேல்ஸ்

[மரணம்]

மூக்கின்மேல் பரு வந்தால் அது ஆளை மறைத்துவிட்டுத் தானே முன்னால் தெரியும். -பல்கேரியா

ஆரோக்கியத்தின் அருமையை நோயில்தான் அறியலாம்.

-ஹங்கேரி

ஈக்கும் இருமலுண்டு. - இதாலி

நோய் வந்தவுடனேயே அதைக் கவனிக்க வேண்டும்.

-லத்தீன்

நோயின் கசப்பிலிருந்துதான் மனிதன் ஆரோக்கியத்தின் இனிமையை அறிகிறான். -கடலோனியா

நோயாளியின் நண்பன் அவனுடைய கட்டில் தான்

- ஆப்பிரிகா

நோயை மறைத்தல் அபாயம். -லத்தீன்

நோயைக் கண்டுபிடித்தலே ஆரோக்கியத்திற்கு ஆரம்பம்

-ஸ்பெயின்

வரும்போதுநோய் குதிரைமேல் வரும், நீங்கும்போது நடந்து செல்லும். - இங்கிலாந்து

காலந்தோறும் நோயும் மாறுகின்றது. -( , ,)

தடுமனுக்கு உணவு, காய்ச்சலுக்கு பட்டினி. -( , ,)

புண்ணும் கட்டியும் எங்கு வேண்டுமானாலும் உண்டாகும்.
-ஜப்பான்

பிணி ஒவ்வொரு மனிதனுக்கும் யஜமானன். -டென்மார்க்

பிணியே வராதவன் முதல் வகுப்பிலேயே இறந்து போவான்
- இங்கிலாந்து
நோயாளியின் அறை பிரார்த்தனைக் கூடம்.
-( , ,)

நோயாளி எதுவும் பேசலாம். - இதாலி

நோயுற்ற காலங்களில் ஆன்மா தன் வலிமையைச் சேர்த்து கொள்கின்றது. -லத்தீன்

நோய் நாம் யார் என்பதைக் காட்டுகின்றது. -( , ,)

நோயாளிக்கு தேனும் கசக்கும். -ரஷ்யா