குறுந்தொகை 81 முதல் 100 முடிய

பாடல்: 81 (இவளே) தொகு

தோழி கூற்று


இவளே நின்சொற் கொண்ட வென்சொற்றேறிப்
பசுநனை ஞாழற் பல்சினை யொருசிறைப்
புதுநல னிழந்த புலம்புமா ருடையள்
உதுக்காண் டெய்ய வுள்ளல் வேண்டும்
நிலவு மிருளும் போலப் புலவுத்திரைக்
கடலுங் கானலுந் தோன்றும்
மடறாழ் பெண்ணையெஞ் சிறுநல் லூரே.


என்றது, தோழியிற் கூட்டங் கூடிப்பிரியும் தலைமகற்குத் தோழி சொல்லியது.


பாடியவர்
வடமவண்ணக்கன் பேரிசாத்தன்.


மேற்கோளாட்சி


குறுந்தொகை :[[]]