குழந்தைச் செல்வம்/அமரகவி பாரதியார்

45. அமரகவி பாரதியார்

ஊரறிய நாடறிய உண்மை யெல்லாம்
     ஒருவரையும் அஞ்சாமல் எடுத்து ரைத்தோன்,
ஆரமுதம் அனையகவி பாடித் தந்தோன்.
     அமரகவி யென்றெவரும் புகழப் பெற்றோன்,
சீருயரும் தமிழ்மக்கள் செய்த வத்தால்
     தென்னாடு சிறக்க வந்த சுப்ரமண்ய
பாரதியார் பெயர்போற்றி ஏத்து வோமே
     பாமாலை புனைந்தவற்குச் சாத்துவோமே.