சங்க இலக்கியத் தாவரங்கள்/150-150

 

வடவனம்

‘வடவனம் வாகை வான்பூங் குடசம்’ என்பது கபிலர் கூற்று. (குறிஞ். 67) வடவனம் என்பதற்கு நச்சினார்க்கினியர் ‘வடவனப்பூ’ என்று உரை கண்டுள்ளார். குறிஞ்சிப் பாட்டிலன்றி ‘வடவனம்’ என்பது சங்க நூல்களில் யாங்கணும் காணப்படவில்லை. இது ஒரு மரமாக இருக்கலாம் என்பர். என்ன மரம் என்று புலனாகவில்லை.

சங்க இலக்கியப் பெயர் : வடவனம்
தாவரப் பெயர் : தெரியவில்லை