மாலை மாற்று: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி இரண்டு பாடல்களுக்குமான விளக்கம்
வரிசை 50:
:யாகாயாழீ காயாகா தாயாராரா தாயாயா
:யாயாதா ராராயாதா காயாகாழீ யாகாயா
 
இப்பாடலின் சொற்பிரிப்பு:
யாகா யாழீ காயா காதா யார் ஆர் ஆதாய் ஆயாய்
ஆயா தார் ஆர் ஆயா தாக ஆயா காழீயா யா கா
 
இதன் பொருள்:
யாகா = வேள்விப் பயனாக விளங்குபவனே
யாழீ = யாழ் இசைப்பவனே
காயா = அருளுருவத்திருமேனி எடுப்பவனே
காதா = "காதுதல்" ஆகிய அழித்தல் தொழிலைச் செய்பவனே
யார் ஆர் = எத்தகையவர்களுக்கும்
ஆதாய் ஆயாய் = ஆகின்ற தாய் ஆயினவனே
ஆயா = ஆராய முடியாத
தார் ஆர் ஆயா = ஆத்திப் பூவை மாலையாகக் கொண்டவனே
தாக ஆயா = வெட்கையுற்ற தாருக வனத்து முனி பத்தினியர் கூட்டத்தை உடையவனே
காழீயா = சீர்காழி இறைவனே
யா = (துன்பங்கள்) எவற்றினின்றும்
கா = எம்மைக்காத்தருள்க
 
 
===பாடல்:3 (தாவாமூவா)===
வரி 55 ⟶ 74:
:தாவாமூவா தாசாகா ழீநாதாநீ யாமாமா
:மாமாயாநா தாநாழீ காசாதாவா மூவாதா
 
இப்பாடலின் சொற்பிரிப்பு:
தாவா மூவா தாசா காழீநாதா நீ யாமா மா
மா மா யாநீ தாந ஆழி சா கா காசா தா வா மூ வாதா
 
இதன் பொருள்:
தாவா = அழியாத
மூவா = முதுமை அடையாத
தாசா =தசகாரியங்கள் என்பவற்றால் அடையும் பொருளாக உள்ளவனே
காழீநாதா = சீர்காழிக்குத் தலைவனே
நீ = அஞ்சி நீங்கத்தகுந்த (சுடுகாட்டில்)
யாமா = யாமம் ஆகிய நள்ளிரவில் நடனம் புரிபவனே
மா = பெருமை மிகுந்தவனே
மா மா = மாண்புமிக்க ஐராவணம் என்னும் யானையின்மேல்
யாநீ = ஏறி வருபவனே
தாந ஆழி = கொடைத்தன்மையில் கடல் போன்றவனே
சா கா = சாதலினின்று காத்தருள்க
காசா = பொன் போன்ற ஒளியை உடையவனே
தா = எல்லா வரங்களும் தருக
வா = எங்கள் முன்னே வருக
மூ = எல்லாவற்றுக்கும் முற்பட்டவனே
வாதா = காற்று முதலிய ஐம்பூதங்களீன் வடிவாக உள்ளவனே
 
===பாடல்:4 (நீவாவாயா)===
வரி 95 ⟶ 136:
:காழியுளானின யேனினயே தாழிசயாதமி ழாகரனே
 
==ஆதாரங்கள்==
;திருச்சிற்றம்பலம்
* [http://www.visvacomplex.com/MaalaiMaaRRu4.html முனைவர் ஜெயபாரதியின் பாடல்களின் பொருள் குறித்த விரிவான விளக்கம்]
"https://ta.wikisource.org/wiki/மாலை_மாற்று" இலிருந்து மீள்விக்கப்பட்டது