திருக்குறள் பரிமேலழகர் உரை/பொருட்பால்/76.பொருள்செயல்வகை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 137:
===குறள் 758 (குன்றேறி ) ===
வரி 145 ⟶ 146:
;''தொடரமைப்பு'': "தன் கைத்து உண்டாக ஒன்று செய்வான் வினை குன்று ஏறி யானைப்போர் கண்டற்றால்".
;இதன்பொருள்: தன் கைத்து உண்டாக ஒன்று செய்வான் வினை= தன் கையதாகிய பொருளுண்டாக ஒரு வினையை எடுத்துக்கொண்டான் அதனைச் செய்தல்; குன்று ஏறி யானைப்போர் கண்டற்று= ஒருவன் மலைமேல் ஏறிநின்று யானைப்போரைக் கண்டால் ஒக்கும்.
;உரைவிளக்கம்: 'ஒன்று' என்பது, வினையாதல் 'செய்வான்' என்றதனாற் பெற்றாம். குன்றேறியான், அச்சமும் வருத்தமும் இன்றி, நிலத்திடை யானையும் யானையும் பொருபோரைத் தான் இனிதிருந்து காணும் அதுபோலக், கைத்துண்டாக வினையை மேற்கொண்டானும், அச்சமும் வருத்தமும் இன்றி வல்லாரை ஏவித் தான் இனிதிருந்து முடிக்கும் என்பதாம்.
===குறள் 759(செய்கபொருளை ) ===
|