திருக்குறள் பரிமேலழகர் உரை/காமத்துப்பால்/116.பிரிவாற்றாமை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 205:
 
; உரை விளக்கம்: சுடுமாயின் என்பது, மந்திர மருந்துகளான் தம்பிக்கப்படாதாயின் என்றவாறு. காமத்திற்கு அதுவும் இல்லை என்பாள் வாளா 'சுடல்' என்றாள். அகறல்- நுகராமை. சுடல் என்பது முன்னும் கூட்டப்பட்டது. தீயினும் கொடியதனை யான் ஆற்றுமாறு என்னை என்பதாம்.
 
 
 
===குறள் 1160 (அரிதாற்றி ) ===
வரி 220 ⟶ 222:
 
 
; இதன்பொருள்: அரிது ஆற்றி அல்லல் நோய் நீக்கி= (நீ சொல்லுகின்றது ஒக்கும்) அரிது ஆற்றி அல்லல் நோய் நீக்கி= பிரிவு உணர்த்தியவழி அதற்கு உடம்பட்டுப் பிரியுங்கால் நிகலும் அல்லல் நோயினையும் நீக்கி;
; இதன்பொருள்:
:பிரிவு ஆற்றிப் பின் இருந்து வாழ்வார் பலர்= பிரிந்தால் அப்பிரிவுதன்னையும் ஆற்றிப் பின்னும் இருந்து உயிர்வாழும் மகளிர் உலகத்துப் பலர்.
; உரை விளக்கம்:
 
 
; உரை விளக்கம்: பண்டை இற்சிறப்பத் தலையளிபெற்று இன்புறுகின்ற எல்லைக் கண்ணே, அஃது இழந்து துன்புறுதற்குடம்படுதல் அரியது ஒன்றாகலின், அரியதனைச்செய்து என்றும், செல்லும் தேயத்து அவர்க்கு யாது நிகழுமென்றும், வருந்துணையும் யாம் ஆ்றறியிருக்குமாறு என் என்றும், அவ்வரவுதான் எஞ்ஞான்று வந்து எய்தும் என்றும், இவ்வாற்றான் நிகழும் கவலை மனத்து நீங்காது ஆகலான் அல்லல் நோய் நீக்கி என்றும், பிரிந்தால் வருந்துணையும் அகத்து நிகழும் காமவேதனையும் புறத்து யாழிசை மதி தென்றல் என்று இவைமுதலாக வந்து அதனை வளர்ப்பனவும் ஆற்றல் அரியவாகலின் பிரிவாற்றி என்றும், தம்காதலரை இன்றியமையா மகளிருள் இவையெல்லாம் பொறுத்துப் பின்னும் இருந்து உயிர்வாழ்வார் ஒருவரும் இல்லை என்பது குறிப்பால் தோன்றப் பின்னிருந்து வாழ்வார் பலர் என்றும் கூறினாள். அரிது என்பது, வினைக்குறிப்புப்பெயர். பிரிவின்கண் நிகழ்வனவற்றைப் பிரிவு என்றாள். செய்து, நீக்கி, ஆற்றி என்பன ஓசைவகையான் அவ்வவற்றது அருமை உணரநின்றன. சிறப்பும்மை விகாரத்தான் தொக்கது. யானும் இறந்துபடுவல் என்பது கருத்து.
 
==பார்க்க:==