பாரதிதாசன் கவிதைகள் குறித்தவை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
No edit summary |
||
வரிசை 874:
நல்ல தமிழ்க்கவி நாமடைந் தோமே. (6:2)
பாரதிதாசன் பாடிய '''திருப்பள்ளியெழுச்சி''' பாடல் முடிந்தது.
இப்பாடல் [[எண்சீர் ஆசிரிய விருத்தம்]] எனும் யாப்பால் ஆனது.
இப்பாடல்களின் மொத்தவரிகள்: 08 (எட்டுவரிகள் மட்டும்)'''தடித்த எழுத்துக்கள்'''
== ==
பாடல்: 07 (நாடக விமர்சனம்)
நாடக விமர்சனம்
ஒருநாள்நம் பாரதியார் நண்ப ரோடும்
உட்கார்ந்து நாடகம் பார்த்திருந்தார், அங்கே
ஒருமன்னன் விஷமருந்தி மயக்கத் தாலே
உயிர்வாதை அடைகின்ற சமயம், அன்னோன்
இருந்தஇடந் தனிலிருந்தே எழுந்து லாவி (05)
"என்றனுக்கோ ஒருவித மயக்கந் தானே
வருகுதையோ" எனும்பாட்டைப் பாட லானான்
வாய்பதைத்துப் பாரதியார் கூவு கின்றார்
மயக்கம் வந்தால் படுத்துக்கொள் ளுவதுதானே
வசங்கெட்ட மனிதனுக்குப் பாட்டா என்றார்! (10)
தயங்கிப்பின் சிரித்தார்கள் இருந்தோ ரெல்லாம்
சரிதானே பாரதியார் சொன்ன வார்த்தை!
மயக்கம்வரும் மதுவருந்தி நடிக்க வந்தான்
மயக்கவிஷம் உண்டதுபோல் நடிப்புக் காட்டும்
முயற்சியிலும் ஈடுபட்டான் தூங்கிவிட்டால் (15)
முடிவு நன்றா யிருந்திருக்கும் சிரமும்போம்!
பாரதிதாசன் பாடிய '''நாடகவிமரிசனம்''' பாடல் முடிந்தது.
இப்பாடல், "நேரிசை ஆசிரியப்பா"வால் ஆனது.
இப்பாடலின் மொத்த வரிகள் 16 (பதினாறு வரிகள் மட்டும்)ஆகும்.
|