அழகின் சிரிப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 2,389:
==தமிழ்==
===<small>முதலில் உண்டானது தமிழ்</small>===
புனல்சூழ்ந்து வடிந்து போன
::நிலத்திலே "புதிய நாளை"
மனிதப்பைங் கூழ்மு ளைத்தே
::வகுத்தது! மனித வாழ்வை,
இனியநற் றமிழே நீதான்
::எழுப்பினை! தமிழன் கண்ட
கனவுதான், இந்நாள் வையக்
::கவின்வாழ்வாய் மலர்ந்த தன்றோ?
<br>
===<small>இசை கூத்தின் முளை</small>===
பழந்தமிழ் மக்கள் அந்நாள்
::பறவைகள் விலங்கு, வண்டு,
தழைமுங்கில் இசைத்ததைத், தாம்
::தழுவியே இசைத்த தாலே
எழும்இசைத் தமிழே! இன்பம்
::எய்தியே குதித்த தாலே
விழியுண்ணப் பிறந்த கூத்துத்
::தமிழே! என் வியப்பின் வைப்பே!
<br>
===<small>இயற்றமிழ் எழல்</small>===
அம்மா என் றழைத்தல், காகா
::எனச்சொல்லல், அஃகென் றொன்றைச்
செம்மையிற் சுட்டல் என்னும்
::இயற்கையின் செறிவி னாலே
இம்மா நிலத்தை ஆண்ட
::இயற்றமி ழேஎன் அன்பே!
சும்மாதான் சொன்னார் உன்னை
::ஒருவன்பால் துளிர்த்தாய் என்றே!
<br>
===<small>தமிழர்க்குத் தமிழ் உயிர்</small>===
வளர்பிறை போல் வளர்ந்த
::தமிழரில் அறிஞர் தங்கள்,
உளத்தையும், உலகில் ஆர்ந்த
::வளத்தையும் எழுத்துச் சொல்லால்,
விளக்கிடும் இயல்மு திர்ந்தும்,
::வீறுகொள் இசை யடைந்தும்,
அளவிலா உவகை அடற்
::றமிழேநீ என்றன் ஆவி!
<br>
===<small>சாகாத்தமிழ்</small>===
படுப்பினும் பாடது, தீயர்
::பன்னாரும் முன்னேற் றத்தைத்
தடுப்பினும், தமிழர் தங்கள்
::தலைமுறை தலைமு றைவந்
தடுக்கின்ற தமிழே! பின்னர்
::அகத்தியர் காப்பி யர்கள்
கெடுப்பினும் கெடாமல் நெஞ்சக்
::கிளைதொத்தும் கிளியே வாழி!
<br>
===<small>கலைகள் தந்த தமிழ்</small>===
இசையினைக் காணு கின்றேன்;
::எண்நுட்பம் காணு கின்றேன்;
அசைக்கொணாக் கல்தச் சர்கள்
::ஆக்கிய பொருள்காண் கின்றேன்;
பசைப்பொருட் பாடல் ஆடல்
::பார்க்கின் றேன்;ஓ வியங்கள்,
நசையுள்ள மருந்து வன்மை
::பலபல நான்காண் கின்றேன்.
<br>
===<small>முன்னூலில் அயலார் நஞ்சம்</small>===
பன்னூறு நூற்றாண் டாகப்
::பழந்தமிழ் மலையின் ஊற்றாய்
மன்னரின் காப்பி னாலே,
::வழிவழி வழாது வந்த
அன்னவை காணு கின்றேன்.
::ஆயினும் அவற்றைத் தந்த
முன்னூலை, அயலான, நஞ்சால்
::முறித்ததும் காணு கின்றேன்!
<br>
===<small>பகைக்கஞ்சாத் தமிழ்</small>===
வடக்கினில் தமிழர் வாழ்வை
::வதக்கிப், பின் தெற்கில் வந்தே
இடக்கினச் செயநினைத்த
::எதிரியை, அந்நாள் தொட்டே
"அடக்கடா" என்று ரைத்த
::அறங்காக்கும் தமிழே! இங்குத்
தடைக்கற்கள் உண்டென் றாலும்
::தடந்தோளுண் டெனச் சிரித்தாய்!
<br>
===<small>வெற்றித் தமிழ்</small>===
ஆளுவோர்க் காட்பட் டேனும்,
::அரசியல் தலைமை கொள்ள
நாளுமே முயன்றார் தீயோர்;
::தமிழேநீ நடுங்க வில்லை!
"வாளினை எடுங்கள் சாதி
::மதம்இல்லை! தமிழர் பெற்ற
காளைகாள்" என்றாய்; காதில்
::கடல்முழக் கத்தைக் கேட்பாய்!
<br>
===<small>படைத் தமிழ்</small>===
இருளினை வறுமை நோயை
::இடறுவேன்; என்னு டல்மேல்
|