பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/582: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கூகுளின் எழுத்துணரித் தரவு பதிவேறியது
(வேறுபாடு ஏதுமில்லை)

06:56, 4 மே 2016 இல் நிலவும் திருத்தம்

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100. யார் காண? இறைவன் மயானத்தில் நடனமாடும் கோலத்தை மீண்டும் எண்ணுகிருர் அம்மையார். பேயோடு பேயாக நின்று கண்ட காட்சி அவர் உள்ளத்தில் அழுந்தப் பதிந்திருக்கிறது. மறுபடியும் விைைவ எழுப்புகிருர், இறைவன் நாகத்தைப் பூணுக அணிந்திருக்கிருன். அந்த நாகத்துக்கு ஐந்து தலைகள் இருக்கின்றன. அவன் ஆடும்போது அந்த நாகம் வாயைத் திறந்து அனலேக் கக்குகிறது. கீழேயும் தி, சுற்றிலும் மயானத் தீ, பாம்பு உமிழ்வதும் தி. எல்லாம் அனல்மயம். அங்கே தீப்பிழம்பாக நின்று நடனமாடுகிருன் இறைவன். இந்தப் பயங்கரமான சூழ்நிலையில் ஆடுகிருனே, அந்த நடனத்தைக் கண்டு களிப்பவர் யார்! இறைவனே விளித்து வினவுகிருர் அம்மையார். அங்காந்து அனல்உமிழும் ஐவாய காகத்தாய்! 'நீ ஆடுகின்ற நடனத்தை அங்கே வந்து யார் காணப் போகிருர்கள்? யார் கண்டு களிப்பதற்காக நீ தீ உண்டாகி எரியும் சுடுகாட்டில் ஆடுகிருய்' என்ற கேள்வி அம்மையார் உள்ளத்தில் எழுகிறது. 'அந்த இடத்தில் யார் இருக்கிருர்கள்? அவனோடு இணைந்து என்றும் பிரியாமல் இருக்கிருள் அன்னே. அவள் நல்ல பருவமடந்தையாகக் காட்சி அளிக்கிருள். தங்கச் செப்புப் போன்று இளமையின் வளப்பத்தைக் காட்டும் நகில் களை உடையவள் அவள். அந்தப் பெருமாட்டிதான் அதைக்