மனோன்மணீயம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 50:
:நல்லன் பகதூர் சுந்தரனை நாளும் நாளும் போற்றுவமே.
 
:4. ஊக்கம் குன்றி உரம்குன்றி ஓய்ந்த தமிழர்க் குணர்வூட்டி
:ஆக்கம் பெருக, அறிவோங்க, ஆண்மை வளரச்செய்(து), உலகில்
:மீக்கொள் புகழைப் பெற்றெழுந்த விறலோன் நமது சுந்தரைனைப்
:பாக்கள் புனைந்து மகிழ்ந்துநிதம் பாடி இனிது போற்றுவமே.
 
:5. தேடி வைத்த செல்வமெல்லாம் திரைகொண் டோட வருந்திமுகம்
:வாடி மெலிந்த தமிழணங்கு மகிழ்ந்து மகிழ்ந்து கூத்தாட
:நாடும் அரிய '''மனோன்மணிய''' நாடகத்தைச் செய்தளித்த
:நீடு புகழோன் சுந்தரனை நித்தம் நித்தம் போற்றுவமே.
 
:6. வையம் புகழும் திருவஞ்சி வளநா டதனை முடிசூடிச்
:செய்ய முறைசெய் தரசாண்ட சேர மன்னர் சரிதமெலாம்
:ஐயம் இன்றிச் சிலையிலெழுத்(து) ஆய்ந்து சொன்ன பேரறிஞன்
:துய்ய சீலன் சுந்தரன்பேர் சொல்லி நாளும் போற்றுவமே.
 
:7. ஆடும் தில்லை அம்பலவன் அடிகள் மறவா அன்புடையோன்,
:பாடித் திருவா சகத்தேனைப் பருகிப் பருகி இன்புறுவோன்,
:கோடைப் பதிசுந் தரமுனியைக் குருவாய்க் கொண்ட குணசீலன்
வரிசை 93:
:சந்ததம் வாழ்க, தழைத்து!
 
<small>அறிஞர் பெருந்தகையும், பேராசிரியருமாகிய '''ராவ் பகதூர் சுந்தரம் பிள்ளை''' அவர்கள் இகவாழ்வை நீத்து, 1947 ஏப்பிரல் மாதத்தோடு ஐம்பது ஆண்டுகள் நிறைந்தன. இந்நிறைவு நாளின் நினைவுக்குறியாகப் பின்வரும் கவிதைகள் பாடப்பெற்றன.</small>
:'''-கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை'''</small>
</td>
</table>
"https://ta.wikisource.org/wiki/மனோன்மணீயம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது