சொன்னார்கள்/பக்கம் 51-60

ஒரு இந்திரியமாகிய மூக்குக்குச் சுறுசுறுப்புத் தருதற்காக மரத்தினலோ, வெள்ளியினாலோ, பொன்னினாலோ தத்தம் தகுதிக்கேற்பச் செய்யப்பட்ட ஒரு சிறு பெட்டியில் பொடியினை அடைத்து உடம்பிலேயே வைத்து கொண்டிருக்கின்றனர். இப் பொடிக்கு இவ்வளவு பெருமை என்றால், உயிருக்கே பேரின்பத்தை நல்க வல்ல வேற்பெருமானை உடம்பில் ஏன் கொள்ளக்கூடாது? என்று கேட்கிறேன். ‘அவ்வாறு கூறும் நீங்கள் உடன் வைத்திருக்கின்றீர்களா? என்று வினாவலாம். 40 ஆண்டுகளுக்கு முன்னர்க் குப்புசாமிப் பத்தர் என்ற ஓர் அன்பர் தங்கப் பட்டைகளுடன் கூடிய இந்த வேலினை எமக்குச் செய்து தந்தனர். இதனை யாம் எப்போதும் எம்முடன் வைத்துக் கொண்டிருக்கின்றோம்.

—ஞானியாரடிகள்

(கந்தர் சட்டிச் சொற்பொழிவில்)


மனிதன் பிறக்கும்போது அந்தப் பிறப்பின் காரணமாகவே, தான் பிறந்த நாட்டின் பழங்காலம் முழுமைக்கும் வாரிசு ஆகிறான். கல்கத்தாவின் ஒரு மூலையில் பிறந்த நான் இந்தியாவின் செல்வத்திற்கு உடைமையாளனாக ஆகிவிட்டேன். அதே மாதிரி நமது சீன நண்பர்களும் சீன நாட்டு நாகரிகத்தின்மேல் உரிமை பெற்றிருக்கிறாள்கள். இந்திய நாட்டின் பண்டைய வரலாறும் நாகரிகமும் சீன நாட்டுடன் தொடர்புடையவை.

—கவி ரவீந்திர நாத் தாகூர் (24-7-1927)

(சிங்கப்பூரில்)


அதிகம் புகழ்ந்தால் கர்வம் ஏற்பட்டுவிடும். எனக்கு அந்த விதமான ஆபத்து பலதடவை ஏற்பட்டிருக்கிறது. அப்படி மண்டைக் கனம் ஏற்பட்டு தலைவீங்கிவிடக்கூடாது என்பதற்காகத்தான் தலையைச் சுற்றி இறுக்கமாகத் தலைப்பாகை கட்டியிருக்கிறேன்.

— சி. வி. ராமன் (17-1-1963

அன்றாடம் வாழ்க்கையில் உழைத்து உழைத்து அலுத்துக் கிடக்கிறவனுக்கும் சரி, பணத்தை ஈட்டி வைத்துக்கொண்டு, மாளிகையில் இருக்கிறவனுக்கும் சரி-கொஞ்ச நேரமாவது எண்டர்டெயின்மெண்ட் கொடுக்கிறவர்களே கலைஞர்கள்தான்.

—நடிகர் தேங்காய் சீனிவாசன்

தமிழ்ப் பாடல்கள் பாடப்படாத கச்சேரிகளுக்குத் தமிழர்கள் போகக் கூடாது.

—திருவாடுதுறை ராஜ ரத்தினம் பிள்ளை (1-9-1941)

(சென்னை விக்டோரியா பப்ளிக் ஹாலில் நடைபெற்ற கூட்டத்தில்)


நான் வேறு வகையான இந்து மதத்தில் நம்பிக்கை யுடையேன். ஆண்களுக்கும், பெண்களுக்கும் வித்தியாசமற்றதும், பிராமணனுயினும், சண்டாளனாயினும் சமத்துவமாகச் சகல உரிமைகளுடனும் வாழச் செய்வதும், மக்களை மக்கள் தன்மையுடன் நடத்துவதுமானதுதான் என் இந்து மதம். அத்தகைய இந்துமதத்தில்தான் எனக்கு நம்பிக்கை.

—லாலா லஜபதிராய் (14-4-1928)

(சென்னை கோகலே ஹாலில்)


முப்பது வருடங்களுக்கு முன்பு (1943 ஆகஸ்ட் எட்டாம் தேதி) நான் ராமகிருஷ்ணாவைக் கல்யாணம் செய்துகொண்ட நாளிலிருந்து இன்றுவரை நாங்கள் சந்தோஷமாகவே குடும்பம் நடத்தி வருகிரறோம். தூரத்திலிருந்து என் வாழ்க்கையின் மீது கல் வீச நினைத்தவர்களுக்கு, நாங்கள் இருவருமே இடம் கொடுத்ததில்லை. இதற்கு ஒருவர் மீது மற்றொருவர் வைத்திருக்கும் நம்பிக்கைதான் காரணம். அவர் எதை நினைக்கிறாரோ அதையே நானும் நினைப்பேன். அப்படிப்பட்ட மன ஒற்றுமை எங்களிடம் இருப்பது மற்றாெரு காரணமாகும்.

—நடிகை பானுமதி

என் வாழ்நாளில் இரண்டு தலைவர்களைப் பெற்றேன். ஒருவர் கலைவாணர் என். எஸ் கிருஷ்ணன். அவர் என்னுடைய கலைத்துறைத் தலைவர். இன்னொருவர் அறிஞர் அண்ணா. இவர் என்னுடைய அரசியல் தலைவர்: இந்த இரண்டு தலைவர்களையும் எனக்குத் தந்தவர் பெரியார்.

எம். ஜி. ஆர். (22-11-1964)


கம்பன் அரங்கைக் கட்டிய வி.ஜி.பி. நிறுவனம், கம்பன் புகழ் பாடியே வாழ்ந்த ரசிகமணி டி. கே. சிதம்பரநாத முதலியாருக்கு இந்த அரங்கில் சிலை வைக்க வேண்டும்.

—கவிஞர் மீ. ப. சோமசுந்தரம் (1-1-1977)

(வி.ஜி.பி. நிறுவனத்தாரின் கோல்டன் பீச்சில், கம்பன் அரங்கத் திறப்பு விழாவில்)


நமக்கு இரண்டு காதுகளும் ஒரே ஒரு நாவும் இருப்பதற்குக் காரணம், கேள்வி அதிகமாகவும், பேச்சு குறைவாகவும் இருக்க வேண்டும் என்பதற்காகத்தான்.

—டயோஜனீஸ்


இது நாள் வரை நான் மதுவை அருந்தியதே இல்லை ஆனல் என்னைப் பொருத்தவரை பலருக்கு வாங்கிக் கொடுத்து இருக்கிறேன். மது அருந்துவதால் கெடுதி இல்லை. அளவுக்கு மேல் போனால்தான் எதுவுமே கெடுதலே தவிர அளவோடு இருந்தால் எந்தவிதக் கெடுதலும் இல்லை.

—பெரியார் (16-9-1973)


என் உடல் அமைப்பைப் பார்த்தாலே புரியும், நான் அதிக உயரம் எட்ட முடியாதவன்; அதனால்தான் எனக்குத் துணையாக அதிக உயரம் உள்ள நாவலர் நெடுஞ்செழியனையும், மற்றவர்களையும் வைத்திருக்கிறேன்: அவர்கள் ஒவ்வொருவரும் என்னிடம் இருக்கும் குறைகளை நிறைவு செய்யும் அறிவாற்றல் உள்ளவர்களாக இருப்பார்கள்.

—அறிஞர் அண்ணா (7-3.1967)

தமிழ் நாட்டைச் சேர்ந்தவன் என்ற முறையில் தமிழிசை வளர்ச்சியில் அக்கறை கொண்டவர்களில் நானும் ஒருவன். ஆனால், தமிழ்ப் பாட்டுக்கும், தெலுங்குப் பாட்டுக்கும் சம அந்தஸ்து அளிக்க வேண்டுமென்பது என்னுடைய கருத்து. தமிழ்ப்பாட்டுக்களைத் தவிர தெலுங்குப் பாட்டுக்களை பாடக் கூடாதென்று ஒருவர் என்னைச் சொன்னால், நான் அந்தக் கச்சேரிக்குப் போகச் சம்மதிக்க மாட்டேன்.

—சங்கீத வித்வான் அரியக்குடி ராமானுஜ ஐயங்கார் (22-11-1941)


பள்ளிக்கூடத்தில் என்னால் படிக்க முடியவில்லை. தெரிந்த காரணம் ஏதுமின்றியே நான் எப்பொழுதும் வகுப்பில் கடைசியாகவே இருந்தேன். ஆசிரியர்கள் ஒரு போதும் என்னிடம் இரக்கம் காட்டியதில்லை. என் தகப்பனாரும் என்னை முட்டாள் என்றே நினைத்தார் என உணர்ந்தேன்.

—தாமஸ் ஆல்வா எடிசன்


சேதுபதி மன்னர் என்னிடம் வைத்துள்ள அன்பு விஷயமாய் எனக்குள்ள நன்றியறிதலை இவ்வளவென்று எடுத்துச் சொல்ல என்னல் முடியவில்லை. என்னாலும் என் மூலமாயும் ஏதாவது நற்காரியம் நடந்திருந்தால், அதில் ஒவ்வொரு அணுவுக்கும் பாரத நாடானது அம்மன்னருக்கே கடன் பட்டிருக்கின்றது. ஏனெனில், நான் சிகாகோவுக்குப் போக வேண்டுமென்கிற எண்ணம் அவருக்கே முதலில் உண்டாயிற்று. பிறகு அக்கருத்தை என் தலையிலேற்றி அதைச் செய்து முடிக்கும்படி ஓயாமல் என்னை வற்புறுத்தியதும் அவரே. அவரே இப்பொழுதும் என் பக்கத்திலே நின்று, முன்னிருந்த மகிழ்ச்சி சிறிதும் குறையாதவராய் முன் நடந்ததைவிடப் பெரிய பெரிய காரியங்களெல்லாம் இனி நடக்க வேண்டுமென்று இன்னும் ஆசை கொண்டிருக்கிறார்.

—சுவாமி விவேகானந்தர்

(பாம்பனில் நடைபெற்ற கூட்டத்தில்)

எனக்கு வரும் எல்லாக் கடிதங்களையம் படிக்க எனக்கு நேரம் இருப்பதில்லை. அதனால் சேர்த்து வைத்திருக்கிறேன். ஏனெனில் ரசிகர்கள் கடிதம் எதுவுமே வராத காலம் ஒன்று வரத்தான் செய்யும். அப்பொழுது அதைப் படித்துப் பார்ப்பேன்,

—ராதா சலூஜா

(பிரபல இந்தி நடிகை)


ஆண்டவன் எனக்கு எவ்வளவு அழகான, கவர்ச்சியான முகத்தை அளித்திருக்கிறான் பார்த்தீர்களா? நான் 12 வயது முதல் குத்துச் சண்டையிடுகிறேன். இத்தொழிலில் ஈடுபட்டுள்ள இந்த 19 ஆண்டு காலத்தில் சுமார் 238 சண்டைகள் போட்டிருக்கிறேன். முகத்தில் ஒரு வடு, ஒரு கீறல் இருக்கிறதா பாருங்கள்.

—உலக குத்துச்சண்டை வீரர் முகம்மது அலி (1974)


கம்பனைப் பற்றியும் அவனது கவிச்சுவையைப் பற்றியும் சிறிதுகூற விரும்புகின்றேன். உடலுக்கு உணர்வை அளிக்கக் கூடியதும், உற்சாகத்தை ஊட்டக்கூடியதும் கம்பனது கவிச்சுவை. எனது பதினைந்தாவது வயது முதல் கம்பனது கவிச்சுவை என் நரம்புகளிலெல்லாம் ஊறியிருக்கின்றது.

—பண்டிதை அசலாம்பிகை அம்மையார் (20-4-1929)

(சென்னை இராயபுரத்தில்,

கண்ணபிரான் பக்த ஜனசபைக் கூட்டத்தில்)


படித்தவர்கள் எல்லோரும் சர்க்கார் உத்தியோகத்தையும் சட்டத்துறையையும் நாடினல், தேசத்திற்கு அதைக் காட்டிலும் பெரிய கெடுதல் இருக்க முடியாது. விவசாயம், வர்த்தகம், கைத்தொழில் முதலிய துறைகளில் அவர்கள் அதிகம் ஈடுபடலாம்.

—சர். வி. பாஷ்யம் ஐயங்கார் (28-3-1893)

(பல்கலைக்கழகப் பட்டாளிப்பு விழாவில்)

ஒவ்வொரு வரும் ஏதாவது ஓர் அந்தரங்க சுயநல நோக்குடன் சட்டசபைக்கு வருகின்றனர். எனக்கு அவ்வித நோக்கு ஒன்றுமில்லை; அதனால் நான் சட்டசபையில் மீண்டும் புகவும் விரும்பவில்லை. -

மகாகவி இக்பால் (1926)


பிலிம் தொழிலை ஏகபோகமாகப் பிடித்துக் கொள்ள நான் முயற்சிப்பதாக ஆங்காங்கு வதந்தி உலவுகிறது. அது உண்மையன்று; எந்தத் தனி மனிதனும் எந்தத் தொழிலையும் ஏகபோகமாக்கிக் கொள்வதென்பது முடியவே முடியாது. தென்னிந்தியாவில் ஒரு ஸ்டுடியோ உண்டாக்குவதன் நோக்கம், இங்கு ஒன்றுபட்ட சினிமாத் தொழில்-கலை வளர்வதற்காகத்தான். வடநாட்டிலுள்ள ஸ்டுடியோக்களைக் காட்டிலும், படமுதலாளிகளுக்குச் சிறந்த செளகரியங்களைச் செய்து கொடுப்பதுதான் என் நோக்கம். இந்த எண்ணத்தைக் கொண்டே டைரக்டர் கே. சுப்பிரமணியம் உண்டாக்கிய எம். பி. பி. வி. ஸ்டுடியோவைப் பல மாறுதல்களோடு ஜெமினி ஸ்டுடியோவாக நான் நிறுவி இருக்கிறேன்.

ஜெமினி அதிபர் எஸ். எஸ். வாசன் (23-7-1941)


நான் பள்ளியில் படித்த காலம் மிகச் சொற்ப காலமேயாகும். திண்ணைப் பள்ளிக்கூடத்தில் 3 வருடமும் பள்ளிக்கூடம் என்னும் ஆங்கில முறைப் பள்ளிக்கூடத்தில் 2 வருஷமுந்தான் படித்தவன். எனக்குக் படிப்பே வராது என்று என் பெற்றாேர் முடிவு கட்டிவிட்டதாகவும், நான் மிகவும் துடுக்கான பிள்ளையாயிருந்ததாகவும் ஆதலால், என்னைப் பள்ளியில் பகல் எல்லாம் பிடித்து வைத்திருந்து, இரவில் வீட்டிற்கனுப்பினால் போதுமென்று கருதியதாகவும் சொன்னார்கள். நான் படித்த நாலு வார்த்தை பிழையறக்கூட எழுத முடியாது என்பதுதான்.

—பெரியார் (21-7-1939)

(கோவை அரசினர் கல்லூரி தமிழ்க்கழக மாணவர்

சங்கக் கூட்டத்தில்.)

தமிழ் நாட்டில் தமிழ்ப் பாட்டுக்களே பாடவேண்டும் என்றால், இதர மொழிப் பாடல்களை பகிஷ்கரிப்பது என்று அர்த்தமல்ல.

—நடிகர். எம். கே. தியாகராஜபாகவதர் (14-9-1941)


ஒரு உண்மையான பெரியாருக்கு வேண்டிய குணங்கள் மூன்று. அவையாவன: (1) அவரைப் பற்றி உலகத்தார் தப்பபிப்பிராயம் கொள்ள வேண்டும். (2) அவரது கொள்கைகள் எங்கும் கண்டிக்கப்படவேண்டும். (3) அவர் கடுமையாக வையவும் சபிக்கவும் படவேண்டும். இத்தகைய மூன்று தன்மைகளையும் பெற்றவர் நமது பெரியாராவர்.

—டி. கே. சி. (20-7-1928)


நம் கையிலே ஐந்து விரல்கள் இருக்கின்றன. கட்டை விரல், மோதிர விரல், சுண்டு விரல் என்று ஐந்து விரல்களும் தனித்தனியே தான் இயங்குகின்றன. ஆனால், பொதுவான ஒரு வேலை என்று வரும்போது, ஐந்து விரல்களும் ஒன்று சேர்ந்து கொள்ளுகின்றன. மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் இத்தகைய உறவுதான் இருக்கவேண்டும்.

—அறிஞர் அண்ணா


என் பாட்டன் (மோதிலால் நேரு) என் தந்தை (ஜவஹர்லால் நேரு) என் தாய் (கமலா நேரு) என் கணவர் (பிரோஸ் காந்தி) ஆகியோர் நாட்டுக்காக உயிரையே அர்ப்பணித்துக் கொண்டனர்.

—பிரதமர் இந்திரா காந்தி (1969)


இனி கலாசாலைகளில் ஒரு மணி நேரம் பாஷா கல்வியும் 6-மணி நேரம் தொழிற் கல்வியும் கற்பித்தல் வேண்டும். கைத்தொழில், விவசாயம் ஆகியவற்றைக் கட்டாயம் பாடமாக வைத்தல் அவசியமாகும்.

— வ. உ. சி. (3-3-1928

(காரைக்குடியில்)

சாதிசமய வேறுபாடுகளைக் கருதாது மெய்யன்பு பாராட்டிச் சார்ந்து ஒழுகுதலே சமரசமாம். அத்தகைய சமரசம் கைவர ஒழுகுதலே சன்மார்க்கமாகும், இந்நிலையை மெய்ந்நிலையாகக் கொண்டு ஒழுகுவோமாயின் நாம் நம் வள்ளற்பெருமானை உள்ளன்போடு வழிபட்டவராவோம், வணங்கினராவோம்.

—பேராசிரியர் கா.நமச்சிவாயமுதலியார் (23-1-1926)

(வடலூர் சமரச சன்மார்க்க மாநாட்டில்)


நான் என் கண்களால் பார்த்தது போல் பார்த்திருந்தாலன்றி வேறு வழியாக இந்தியாவின் வறுமையைப் பற்றித் தெரியவராது. ஜனங்களின் மரணத்திற்கு பிளேக் ஒரு முக்கிய காரணம். இந்த வியாதியாலுண்டாகும் மரணத் தொகை மிக்கப் பரிதாபகரமானது. 1901-ம் வருடத்தில் 2 லட்சமும், 1902-ம் வருடத்தில் 8 லட்சமும், 1904-ம் வருடத்தில் 10லட்சமுமாக வருடாவருடம் லட்சக்கணக்கான இந்தியர்கள் மடிகின்றனர். பிளேக் வியாதியால் மாள்வதை இன்னும் தடுத்தபாடில்லை. பட்டினி கிடந்தே மக்கள் தங்கள் தேக வலிமையைக் ஒடுக்கிக் கொண்டனர். பட்டினி கிடப்பதைத் தடுக்காத வரையில் பிளேக் வியாதி தலையெடுத்து ஆடிக்கொண்டிருக்கும். இந்தியாவில் உண்டாகும் பஞ்சம் மழையில்லாமையினாலல்ல. ஐனப் பெருக்கத்தினாலும் அல்ல. மக்களின் பரிதாபகரமான வறுமையும் ஏழ்மையுமே காரணமாகும்.

— டாக்டர் சந்தர்லாந்து


கவிதைகளையும், மற்றும் சிறந்த இலக்கியங்களையும் மனப்பாடம் செய்யும் பழக்கத்தை நல்ல முறையில். மறுபடியும் பழக்கத்திற்குக் கொண்டு வரலாம். முந்திய காலத்தில் இந்தப் பழக்கம் இருந்து வந்தது. இப்போது மறைந்து வருகிறது. எனவே, அதனை மறுபடியும் கொண்டு வந்தால் ஞாபக சக்திக்கும் ஆக்கம் ஏற்படும்.

—நெ.து. சுந்தரவடிவேலு

ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் சரி, இரண்டு கைகளையும் பார்த்தே பலன் சொல்ல வேண்டும். கைரேகை, ஒரு தெய்வீகக் கலை. ஒரு சிலர் இதில் பொய்யையும் சேர்த்து வியாபாரம் செய்வதால் இந்தச் கலையின் மீது மக்களுக்கு நம்பிக்கை குறைந்து போகும்.

— கைரேகை நிபுணர் ரவிசங்கர் (23-7-1971)

என் காலத்தின் கலைக்கும் ஓர் வளர்ச்சிச் சின்னமாக நான் இருந்தேன். காளைப் பருவத்தில் இதை நான் உணர்ந்து, என் முதிய பருவத்திலும் இதை நன்றாய் அறியும்படி கட்டாயம் நிகழ்ந்தது. தன் வாழ்நாளில் உயர்ந்த நிலையில் என்னப்போல் வாழ்ந்து உண்மைகளை அறிந்தவர்கள் மிகச்சிலரே இருக்கக்கூடும்.

— ஆஸ்கார் ஒயில்ட்


'போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து' என்பது போன்ற அவ்வையாரின் மூதுரைகள் எனக்குப் பிடிக்கவில்லை. எதற்குப் போதும் என்ற மனம் வேண்டும்? தமிழர்களுக்கு ஏற்கெனவே உள்ள சோம்பேறித்தனம் போதாதென்று மேலும் அதை வளர்க்கவா?

—தொழிலதிபர். எஸ்.எம். பழனியப்ப செட்டியார்

சாதாரண சிறையில், சாதாரண கைதியாக நான் அடைந்த நிலையைப் பற்றி நான் வெட்கப்பட வேண்டியதேயில்லே. இது எனக்கு ஏற்பட்ட தண்டனையே. தண்டனையைப் பற்றி வெட்கப்படுவதில் என்ன பொருள் இருக்கிறது? என்னுடைய வாழ்க்கையில், நான் செய்யாத குற்றத்திற்காகவும் தண்டித்திருக்கிறார்கள். செய்த குற்றத்திற்காகவும் தண்டித்துமிருக்கிறார்கள். அநேக சந்தர்ப்பங்களில், நான் செய்த குற்றங்களுக்குத் தண்டிக்கப்படாமலும் வந்திருக்கிறேன்.

— ஆஸ்கார் ஒயில்ட்

என்னவோ இந்த நாட்டின் 55 கோடி ஜனங்களில் ஹாஜிமஸ்தான்தான் மாபெரும் பாவிபோல இந்த நாட்டின் பத்திரிகைகளிலும், பாராளுமன்றத்திலும், மகாராஷ்டிர சட்டசபையிலும் என் பெயர் தினம் தினம் அடிபட்டுக் கொண்டிருக்கிறது. யார் வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் சொல்லிக்கொண்டு போகட்டும். ஒருவனுக்குப் பெருமையோ இழிவோ எதற்கும் இப்படியொரு விலை கொடுத்துத்தான் ஆக வேண்டும். இந்த ஹாஜிமஸ்தானைத் தூக்கிச் சாப்பிடுகிற அளவுக்குப் பெரும் கள்ளக்கடத்தல்காரர்கள் இங்கே உண்டு என்று வேதனையோடு சொல்லிக் கொள்கிறேன்.

—ஹாஜிமஸ்தான் (1975)

(கடத்தல்காரர்)

என்னை அடக்கஞ் செய்த பிறகு கல்லறையின் மேல், “நான் ஒரு தமிழ் மாணவன்’ என்று நீங்கள் எழுத வேண்டும்.

— ஜி. யூ, போப் (12-2-1908)


நான் அயர்லாந்தில் பிறந்தேன்; ஸ்காட்லாந்தில் வளர்ந்தேன்; ஆங்கிலத்தில் மூழ்கினேன். ஆயினும், என் வாழ்நாளில் ஐம்பதாண்டுகளுக்கு மேல் இந்திய நாடும், அந்நாட்டு மக்களுமே என் ஆழ்ந்த கருத்து முழுவதையும் இழுத்துக் கொண்டதனால், நான் இந்தியர்களுள் ஒருவனாகிவிட்டேன்.

— கால்டுவெல்

அரும்பெரும் மனிதர்கள் திடீரென்று தோன்றி விடுவதில்லை. அந்தந்தப் பருவங்கள் அந்தந்தக் காலத்துக்குத்தகுதியான பிரத்தியேகமான மலர்களை உண்டாக்குவது போல, சமுதாயத்தில் மாறிவரும் தேவைகளுக்கேற்ப மகா புருஷர்கள் உருவாக்கப்படுகின்றனர்.

— ராஜாஜி

"https://ta.wikisource.org/w/index.php?title=சொன்னார்கள்/பக்கம்_51-60&oldid=1009819" இலிருந்து மீள்விக்கப்பட்டது