68அப்பா! சிலர் கறுப்பு மூக்குக் கண்ணாடி அணிகிறார்களே, அதற்குக் காரணம் என்ன?

அம்மா! வெளியே போகும்போது வெயில் வெளிச்சம் கண்களைப் பறிக்கிறது அல்லவா? அத்தகைய ஒளியை அதிக நேரம் பார்க்கும் பொழுது கண்கள் நோவும. அது இல்லாமல் இருப்பதற்காகவே கறுப்பு நிறமான கண்ணாடியுள்ள மூக்குக் கண்ணாடிகளை உபயோகிக்கிறார்கள்.

அம்மா! வெள்ளை நிற ஒளியைக் கிரகிப்பதில்லை என்பதையும், கறுப்பு நிறம் ஒளியைக் கிரகித்துவிடும் என்பதையும் நீ அறிவாய். அதனால் சாதாரணக் கண்ணாடி மூலம் ஒளி முழுவதும் கண்ணுக்குள் வந்து கஷ்டம் தரும். மூக்குக் கண்ணாடியிலுள்ள கண்ணாடி சிறிதளவு கருமை கலந்ததாக இருந்தால் அதன் வழியாக ஓரளவு ஒளியே கண்ணுக்கு வந்து சேரும். அதனால் கண்ணுக்குக் கஷ்டமாயிராது, இதமாயிருக்கும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=தந்தையும்_மகளும்/68&oldid=1538205" இலிருந்து மீள்விக்கப்பட்டது