ஆசிரியர்:பொ. திருகூடசுந்தரம்

பொ. திருகூடசுந்தரம்
(1891–1969)
பொ. திருகூடசுந்தரம், 1891ஆம் ஆண்டில் பிறந்தவர். முதுகலைப் பட்டப்படிப்பின்போது பல்கலைக் கழகத்தில் தங்கப் பதக்கம் பெற்றவ்வர். ஆங்கிலத்திலும் தமிழிலும் புலமையுடையவர். 1921-ல் வழக்கறிஞர் வேலையை விட்டு ஒத்துழையாமை இயக்கத்தில் ஈடுபட்டார். சென்னை செனட் சபையில் உறுப்பினராக இருந்தார். திருநெல்வேலி நகர சபையில் உறுப்பினராகவும், தேவகோட்டை நகர சபையில் துணைத் தலைவராகவும் இருந்தவர். இவரும் இவரது மனைவியாரும் நாகர்கோவிலில் தீண்டாமைக்கு எதிராக சங்கம் நிறுவி ஆலயப் பிரவேசத்துக்கு அடிகோலினர். மேலும் தமிழ் ஹரிஜன் பத்திரிகைக்கு ஆசிரியராயிருந்தார். காந்தியடிகளின் கட்டுரைகளே முதன் முதலில் தமிழில் மொழி பெயர்த்தவர். தமிழில் சொந்தமாக பதினைந்து நூல்களும் மொழிபெயர்ப்பாகப் பத்து நூல்களும் எழுதியுள்ளார். இவற்றில் சென்னை அரசாங்கத்தால் மூன்று நூல்கள் பரிசு பெற்றவை. அறிவியல் முதலிய கடினமான பொருள்களை எளிதில் விளங்குமாறு எழுதக் கூடியவராக இருந்தார். தமிழ்க் கலைக் களஞ்சியத்தின் கூட்டாசிரியராக இருந்தவர்.

படைப்புகள் தொகு


 
இந்த எழுத்தாளரின் அனைத்து எழுத்துப் படைப்புகளும் பொது கள உரிமத்தில் உள்ளது. ஏனென்றால் தமிழ்நாடு அரசால் இவரது பணிகள் நாட்டுடைமை ஆக்கப்பட்டு பொது கள உரிமத்தில் வெளியிடப்பட்டுள்ளது. புத்தகங்களை நாட்டுடைமை ஆக்குவதற்கு தமிழக அரசு காப்புரிமைகளைப் பெற தகுந்த நடைமுறைகளைப் பின்பற்றி, பின்பு பொது மக்கள் பயன்பாட்டிற்கு நாட்டுடைமை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. உலகில் உள்ள அனைவரும் தடையின்றி பணிகளை பயன்படுத்திக்கொள்வதற்கு பொது கள உரிமம் தேவைப்படுகிறது. தமிழ்நாடு அரசால் நாட்டுடைமை செய்யப்பட்ட நூல்கள் அனைத்தும் (CC0 1.0) உலகளளாவிய பொதுப் பயன்பாட்டு உரிமத்தில் வெளியிடப்பட்டுள்ளது.