85அப்பா! இரும்புக் கம்பியை உலையில் காயவைத்து வளைத்துவிடுகிறார்களே, அதற்குக் காரணம் என்ன?

ஆம், அம்மா! இரும்புக் கம்பியை நம்மால் வளைக்க முடியவில்லை. ஆனால் கொல்லர் உலைத்தீயில் வைத்து பழுக்கக் காய்ச்சி எளிதாக வளைத்துவிடுகிறார். அப்படி நாம் வளைக்க வளையாத கம்பி அவர் கம்பி அவர் வளைக்க வளைவதற்குக் காரணம் என்ன?

அம்மா! உலகத்தில் காணப்படும் ஒவ்வொரு வஸ்துவும் கண்ணுக்குத் தெரியாத நுண்ணிய மூலக்கூறுகள் என்பவைகளால் ஆனவை என்று நீ அறிவாய். அவை ஒன்றோடொன்று ஒட்டிக் கொண்டிருப்பதில்லை. இடைவெளிகள் உடையனவாகவே இருக்கின்றன. அத்துடன் அவை இடைவிடாமல் ஆடி அசைந்து கொண்டும் இருக்கின்றன. சூடுபட்டால் அவை அதிகமாகவும் வேகமாகவும் அசையும். அதனால் இடைவெளிகள் அகலமாய்விடும். மூலக்கூறுகள் முன்னிலும் அதிகமாக விலகி விலகி இருக்கும்.

அவ்விதமே இரும்புக்கம்பியை உலையில் காய்ச்சும் பொழுது அதிலுள்ள மூலக்கூறுகள் அதிகமாக விலகி விடுகின்றன, அதனால்தான் அதை வளைக்க முடிகிறது. சூடாயுள்ள கம்பி முன்போல் குளிர்ந்துவிடுமானால் மூலக்கூறுகளும் முன்போல் நெருங்கிவிடும். அதனால் கம்பியை அப்பொழுது வளைக்க முடியாமற் போகிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=தந்தையும்_மகளும்/85&oldid=1538247" இலிருந்து மீள்விக்கப்பட்டது