திருக்குறள் மணக்குடவருரை/துறவுடைமை

௩௫-வது.-துறவுடைமை.

துறவென்பது, ஒருவன் தவம் பண்ணா நின்ற காலத்து யாதாயினும் ஒரு தொடர்ப்பாடு உளதாயினும் அதனைப் பற்றறத் துறத்தல். இது மயக்கமற்றார்க்கு வருவதொன்றாதலின், நிலையாமையின் பின் கூறப்பட்டது.

டல்வேண்டும் ஐந்தின் புலத்தை; விடல்வேண்டும்
வேண்டிய வெல்லாம் ஒருங்கு.

இ-ள்:- ஐந்தின் புலத்தை அடல் வேண்டும்-(துறப்பாற்குப்) பொறிகளைந்தினுக்கும் நுகர்ச்சியான ஐந்தினையும் கொல்லுதல் வேண்டும்; வேண்டிய எல்லாம் ஒருங்கு விடல் வேண்டும்-(அதற்காகத் தான்) விரும்பின எல்லாவற்றையும் ஒரே காலத்தில் விடுதல் வேண்டும்.

[பொறிகள் ஐந்தாவன-மெய், வாய், கண், மூக்கு, செவி. அவற்றிற்கு நுகர்ச்சியான (அஃதாவது அநுபவமான) ஐந்தாவன-ஊறு, சுவை, ஒளி, நாற்றம், ஓசை. அந்நுகர்ச்சியான ஐந்தையும் கொல்லுதலாவது, அவை தன் மனத்தைக் கவராதபடி அவற்றை அடக்கியாளுதல்.]

இஃது, ஐம்புலங்களையும் வெல்ல வேண்டுமென்பதூஉம், அதற்குத் தான் விரும்பிய பொருள்களையெல்லாம் ஒருங்கு விட வேண்டுமென்பதூஉம் கூறிற்று. ௩௪௧.

யல்பாகும் நோன்பிற்கொன் றின்மை; உடைமை
மயலாகும் மற்றும் பெயர்த்து.

இ-ள்:- ஒன்று இன்மை நோன்பிற்கு இயல்பாகும்-யாதொரு பொருளையும் இலதாதல் தவத்திற்கு இயல்பாகும்; உடைமை பெயர்த்தும் மயல் ஆகும்- பொருளுடைமை மீண்டும் (பிறத்தற்குக் காரணமான) மயக்கத்தைத் தரும்.

[உம்மை "பெயர்த்து" என்பதனோடு கூட்டியுரைக்கப்பட்டது. மற்று என்பது அசை. ஆகும் என்பது தரும் என்றும் பொருளில் வந்தது.]

இது, பொருளுடைமை பிறப்பிற்கு ஏதுவாய மயக்கத்தை உண்டு பண்ணு மென்றது. ௩௪௨.

ற்றும் தொடர்ப்பா டெவன்கொல், பிறப்பறுக்கல்
உற்றார்க் குடம்பு மிகை.

இ-ள்:- பிறப்பு அறுக்கல் உற்றார்க்கு உடம்பு மிகை-பிறப்பறுக்கல் உற்றார்க்கு உடம்பும் மிகையாயிருக்க, மற்றும் தொடாப்பாடு எவன்- மற்றும் சில தொடர்ப்பாடுகளை உண்டாக்குவது யாதினைக் கருதியோ?

[கொல் என்பது அசை. பிறப்பு அறுக்கல் உற்றார்-பிறப்பினை ஒழித்தற்குரிய தவத்தினைச் செய்வார். மிகை-மிகுதி, தொடாப்பாடு- பற்று.]

இது, தவம் செய்வார்க்குச் சரீரப்பற்றும் ஆகா தென்றது. ௩௪௩.

ற்றி விடாஅ இடும்பைகள், பற்றினைப்
பற்றி விடாஅ தவர்க்கு.

இ-ள்:- பற்றினை பற்றி விடாதவர்க்கு-பொருள்களைப் பற்றி விடாதாரை, இடும்பைகள் பற்றி விடா-துன்பங்கள் பற்றி விடாதே நிற்கும்.

இது, பொருள்களைத் துறவாக்கால் வினை கெடாதென்றது. ௩௪௪.

யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்
அதனின் அதனின் இலன்.

இ-ள்:- யாதனின் யாதனின் நீங்கியான்- யாதொன்றினின்றும் யாதொன்றினின்றும் நீங்கினான், அதனின் அதனின் நோதல் இலன்- அதனளவு அதனளவு துன்பமுறுதல் இலன்.

இது, பற்றினை விடவிடத் துன்பம் குறையு மென்றது. ௩௪௫.

ற்றற்ற கண்ணே பிறப்பறுக்கும்; மற்று
நிலையாமை காணப் படும்.

இ-ள்:- பற்று அற்ற கண்ணே பிறப்பு அறுக்கும்-(ஒருவன் எல்லாப் பொருள்களோடும்) பற்று அற்ற பொழுதே (அது) பிறப்பை அறுக்கும்; மற்று நிலையாமை காணப்படும்-அதனை விடாத பொழுது நிலையாமை காணப்படும்.

[நிலையாமை-நிலையாமையையுடைய யாக்கை. காணப்படும்-உண்டாகும்.]

இஃது, எல்லாப் பற்றினையும் அறுக்கப் பிறப்பு அறுமென்றது. ௩௪௬.

வேண்டின் உண்டாகத் துறக்க; துறந்தபின்
ஈண்டியற் பால பல.

இ-ள்:- உண்டாக வேண்டின் துறக்க-(தன் உயிர்க்கு ஆக்கம்) உண்டாக வேண்டின் (தன் உடைமை யெல்லாவற்றையும்) துறக்க; துறந்த பின் ஈண்டு இயல் பல பால-துறந்த பின் இவ்விடத்தே இயலும் பகுதிகள் பல.

இது, துறவினது இம்மைப் பயன் கூறிற்று. ௩௪௭.

லைப்பட்டார் தீரத் துறந்தார்; மயங்கி
வலைப்பட்டார் மற்றை யவர்.

இ-ள்:- தீர துறந்தார் தலைப்பட்டார்-பற்றறத் துறந்தவர் முத்தியைத் தலைப்பட்டார்; மற்றையவர் மயங்கி வலைப்பட்டார்-அல்லாதார் மயங்கிப் பிறப்பாகிய வலையிலே அகப்பட்டார்.

[தலைப்படுதல்-பொருந்துதல்-அடைதல். வலை போலத் துன்பத்தைத் தருதலின், பிறப்பினை வலையென்று கூறினார்.]

இது, துறவினது மறுமைப் பயன் கூறிற்று. ௩௪௮.

யானென தென்னும் செருக்கறுப்பான்; வானோர்க்
குயர்ந்த உலகம் புகும்.

இ-ள்:- யான் எனது என்னும் செருக்கு அறுப்பான்-யானென்றும் எனதென்றும் நினைக்கின்ற மயக்கத்தை அறுக்குமவன், வானோர்க்கு உயர்ந்த உலகம் புகும்-தேவர்க்கு மேலாகிய உலகத்தின் கண்ணே செல்லுவன்.

இது, துறவினால் வீடு எய்து மென்றது. ௩௪௯.

ற்றுக பற்றற்றான் பற்றினை; அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு.

இ-ள்:- பற்று அற்றான் பற்றினை பற்றுக-பற்றினை அறுத்தானது பற்றினைப் பற்றுக; அப்பற்றை பற்று விடற்கு.பற்றுக-அதனை(ப் பற்றுங்கால் பயன் கருதிப் பற்றாது) பற்று விடுதற்காகப் பற்றுக.

பற்றற்றான் பற்றாவது, தியான சமாதி.

இது, பொருள்களின் பற்றினை விடுதற்கு மெய்ப்பொருளைப் பற்றுக என்றது. பின் மெய்யுணர்தல் கூறுதலான், இது பிற்படக் கூறப்பட்டது. ௩௫0.