தென்கோவை கந்தையா பண்டிதர் பாடல்கள்

யாழ்ப்பாணம், தென்கோவை கந்தையா பண்டிதர் தாம் இயற்றிய நூல்கள் தோறும் சுன்னாகம் குமாரசாமிப் புலவருக்கு செய்யுளால் 'குரவர்' (குரவர்=ஆசிரியர், ஞானகுரு) வணக்கம் கூறுவது வழக்கம், அவற்றில் ஒன்று:

பொய்தவிரு நெஞ்சமுளான் புலவரெலாங் கொண்டாடும் புலமை யாளன்
வய்யநிகழ் புகழாளன் வண்டமிழும் பிறமொழியும் மரபி னாய்ந்தோன்
கைதவமி லாதடியேற் கருங்கலைகள் பலதெரிந்த கருணை யாளன்
செய்திகழும் வளச்சுன்னைக் குமாரசுவா மிப்புலவன் திருத்தாள் போற்றி.