தென்னைமரத் தீவினிலே/வேட்டை

17
வேட்டை

போலீஸ் பிடீயிலிருந்து தப்பிய விஜயனின் மனம் அமைதியின்றி தவித்துக் கொண்டிருந்தது.

நாட்டிற்கு உழைக்கும் தான் என்றாவது ஒரு நாள் வள்ளியை அனாதையாக்கி விட்டு இறக்க நேரிடும் என்றுதான் அவன் எண்ணிருந்தான். ஆனால் இன்று-அவனை அனாதையாக்கி, அவள் சென்று விட்டாள்.

அவனது கவலையெல்லாம் இடுகாட்டிலிருந்து காரில் ஏற்றி அனுப்பிய அருணகிரியும், மற்றவர்களும் பத்திரமாக வீடு போய்ச் சேர்ந்திருப்பார்களா? என்பதுதான்.

இதைத் தெரிந்து கொள்ள ஒரு முறை அருணகிரியை நேரில் பார்த்து விட்டால் போதும். அதன் பிறகு என் உயிர் போவதைப்பற்றி நான் கவலைப்பட மாட்டேன் என்று விஜயன் எண்ணிக் கொண்டான்.

திடீரென்று அவள் உள்ளத்தில் ஒரு புதிய யோசனை தோன்றியது. போலீஸ் கண்ணிலிருந்து தப்ப ஒரு புத்த பிட்சுவைப் போல வேடமணிந்து தன் மகனைத் தேடிப் புறப்பட்டான் விஜயன் பொன்னம்பலம் வீட்டிற்கு வந்ததும் அங்கிருந்த அனைவரும் எலிசபெத் ஓட்டலுக்குச் சென்றதை அறிந்து அங்கு விரைந்தான் விஜயன். அங்கு அருணகிரியை சந்தித்தான்

“அப்பா நான் உன் கூட சிறிது தூரம் வருகிறேன்,” என்று மிகவும் கெஞ்சுகிற குரலில் கேட்டு விட்டு அருணகிரி பரமகுருவின் முகத்தைப் பார்த்தான்

“சரி விஜயா...அருணகிரி ஆசைப்படுகிறான்; பத்திரமாக போய்விட்டு வாருங்கள்,” என்றார்.

கொழும்பு நகரத்துத் தெருக்கள் நியான் விளக்குகள் ஒளியில் மினுக்கிக் கொண்டிருந்தன.

அருணகிரி, விஜயன் இருவருமே ஒருவரை விட்டு ஒருவர் பிரிந்து கூடியிருப்பதால் அந்த மகிழ்ச்சியில் பேசிக்கொண்டே வந்து விட்டனர்.

“சரி, திரும்பலாமா அருணகிரி?” என்று விஜயன் கேட்கும்போது, எதிரில் நெரிசலான ஒரு தெருவிலிருந்து தங்களை நோக்கி வரும் ஒரு கூட்டத்தை துரத்திக்கொண்டு; சில ராணுவத்தினர் ஓடிக் கொண்டிருந்தனர்.

ராணுவத்தினரைப் பார்த்ததும் விஜயன் உள்ளத்தில் ஒருவித பயம் இயற்கையாக எழுந்தது. ஆயினும் தான் அணிந்திருந்த புத்த பிட்சு உடையின் மீதுள்ள நம்பிக்கையினால், சட்டென்று அருகிலுள்ள ஒரு சிறிய சந்தினுள் நுழைந்தான்.

சிறிது தூரம் நடந்து பல தெருக்களைக் கடந்து சென்று வெளியே வந்தான். அங்கே பல வீடுகள் பற்றி எரிந்து கொண்டிருப்பதை இருவரும் கண்டனர்.

முன்னேயும் பின்னேயும் செல்ல முடியாத நிலையில் ஒரு மூலையில் வந்து நின்ற போது, விஜயன் மனதில் திடீரென்று, இந்தத் தெருவிற்கு ஒரு தெரு தாண்டி உள்ள ஒரு வீட்டில் தானே லிஸியா இருக்கிறாள்’ என்பது நினைவிற்கு வந்தது. அந்த வீட்டின் அடையாளம் அவன் நினைவிற்கு வந்ததும், அருணகிரியின் கையைப் பற்றிக்கொண்டு வேகமாக லிசியாவின் வீட்டிற்குச் சென்று கதவைத் தட்டினான்.

கதவு திறக்கப்பட்டு, கவுண் அணிந்திருந்த முப்பது வயதுச் சிங்களப் பெண் ஒருவள் எட்டிப் பார்த்தாள். நிற்கும் புத்த பிட்சுவை முதலில் பார்த்துவிட்டு, “உங்களுக்கு யார் வேண்டும்?” என்று பணிவோடு கேட்டாள்.

அன்பான குரலில், “மகளே நீ, விக்கிரம சிங்காவின் மனைவி லிஸியா தானே” என்று கேட்டான்.

விஜயன். இதைக் கேட்டவுடன், “உள்ளே வாருங்கள் ஐயா” என்று உள்ளே அழைத்துச் சென்று கதவைத் தாழிட்டாள். பிட்சுவிற்கும், உடன் வந்துள்ள அருணகிரிக்கும் ஆசனமிட்டு விட்டு அறையின் ஒரத்தில் துளியில் உறங்கிக் கொண்டிருக்கும் குழந்தையின் அருகில் சென்று நின்று கொண்டிருந்தாள்.

“பரவாயில்லை; நீயும் உட்காரு லிசியா, நான் உன் கணவர் விக்ரம சிங்காவின் உயிர் நண்பன் கனக விஜயன். உன்னைச் சில நிமிஷங்கள் இந்த பிட்சு வேடத்தில் ஏமாற்றி விட்டதற்கு மன்னிக்க வேண்டும். இது என் மகன் அருணகிரி,” என்று. விஜயன் கூறி முடிப்பதற்குள்,

லிசியா வியப்பின் எல்லைக்கே சென்று திரும்பினாள்.

“எதற்கு இந்த வேடம் அண்ணா? என்னால் நிச்சயமாக அடையாளம் கண்டு கொள்ளவே. முடியவில்லை. வள்ளியம்மை சவுக்கியமாக இருக்கிறாளா என்று விசாரித்தாள்.

லிஸியாவின் கணவர் விக்ரமசிங்காவிற்கு, பாக்கு பாக்டரியில் வேலை. பெண் குழந்தை பிறந்து ஆறு மாதமாவற்குள் ஒரு லாரி விபத்தில் இறந்து விட்டான். விஜயனும் அவனும் நீண்ட நாளைய நல்ல நண்பர்கள். அவனுடன் விஜயன் இங்கு அடிக்கடி வருவான்.

இவளிடம் வள்ளியம்மையின் துயரக்கதையை எப்படிக் கூறுவது என்று விஜயன் தயங்கிக் கொண்டு இருந்தான். அவள் மீண்டும் வள்ளியைப் பற்றிக் கேட்கவே வேறு வழியின்றி அனைத்தையும் கூறி முடித்தான்.

வள்ளியம்மையின் பிரிவைக் கேட்டு நீண்ட நேரம் அழுதாள் லிஸியா. பிறகு தன்னைத் தேற்றிக்கொண்டு அவர்கள் இருவருக்கும் உண்பதற்கு சில பலகாரங்களைக் கொண்டுவந்து வைத்தாள். இதற்குள் தூளியில் இருந்த குழந்தை அழுதது. அதை எடுத்து பால் கொடுத்து விட்டு திரும்பவும் தூளியிலிட்டு ஆட்டினாள் குழந்தை பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருந்தது.

ஆட்டிக் கொண்டே “லிசியா, நான் இங்கு வர வேண்டும் என்று திட்டமிட்டு வரவில்லை. குழந்தைக்கு ஏதும் வாங்காமல் வந்து விட்டேன். வருகிற வழியில பக்கத்துத் தெருவிலே ராணுவத்தினர் சோதனை செய்து கொண்டிருக்கிறார்கள். பாதுகாப்பைத்தேடித்தான் உன்னை தேடிக் கொண்டு சட்டென்று இங்கு வந்து விட்டேன்?” என்றான் விஜயன் .

“பரவாயில்லை அண்ணா! இரவு தங்கிப் போகிறீர்களா? உங்கள் சவுகரியம் எப்படி?” என்று கேட்டாள் லிஸியா.

நான் இரவு தங்குவதற்கு இல்லை முன்னைப் போல என் நிலைமை இபபோது இல்லை எந்த நிமிடமும் போலீசில் சிக்கலாம் சிக்கினால் எனக்கு சிறைதான். அதனால் அருணகிரியை, மனைவியின் அண்ணன் பரமகுருவிடம் ஒப்படைத்து விட்டேன். அவர்கள் சென்னையிலிருந்து வந்திருக்கிறார்கள். இரண்டு நாளில் ஊருக்குப் போய் விடுவார்கள்.

அருணகிரியை பார்க்க வேண்டுமென்று வந்தேன். பிறகு நாங்கள் எங்கேயோ புறப்பட்டு எப்படியோ இங்கு வந்து விட்டோம். நீ எனக்காக ஒரு உதவி செய்ய வேண்டும் லிசியா,” என்றான் விஜயன்.

ஒரு தென்னந் தோப்பில் தலைமறைவாக இருந்து வருகிறேன் இரவு அங்கு போய்ச் சேராவிட்டால் நண்பர்கள் கவலைப்படுவார்கள்

அருணகிரியை உன் பொறுப்பில் விடுகிறேன். இன்று ஒரு இரவு இங்கு தங்கியிருக்கட்டும். விடிந்து அவனை ஹார்பர் ரோடில் உள்ள எலிசபெத் ஓட்டலில் கொண்டு போய் விட்டு விடு. நான் புறப்படலாமா லிசியா,” என்றான் விஜயன்.

லிசியா, “நீ தைரியமாக போய் வா அண்ணா. நீ சொன்னபடியே செய்கிறேன்; கவலைப் படாதே,” என்று சொன்னாள்.

விஜயன் அருணகிரியை முத்தமிட்டு விடை பெற்றுக் கொண்டு, திறந்த கதவு வழியே வெளியேறி விட்டான்.

அருணகிரியின் மனமெல்லாம் தந்தை திடீரென்று தோன்றி திடீரென்று மறைந்து விட்டதைப் பற்றியே எண்ணிக் கொண்டிருந்தது.

எந்த நிமிடமும் தன் தந்தையின் உயிருக்கு ஆபத்து என்பதை அவர் லிஸியாவிடம் பேசிக் கொண்டதிலிருந்து அருணகிரி உணர்ந்து கொண்டான். இதை நினைக்கையில் அவனுக்கு தன்னையும் மீறித் துக்கம் வந்து விட்டது.

சாப்பாட்டை முடித்துக் கொண்டு வந்ததும் “அருணகிரி சீக்கிரமாக படுத்துக் கொள். காலையில் உன்னை சீக்கிரம் ஓட்டலில் கொண்டுபோய் விடுகிறேன். அங்குள்ளவர்கள் வெளியே போன உன்னைக் காணாமல் கவலைப்படுவார்கள் அல்லவா?” என்று கூறி அவனைப் படுக்கச் செய்தாள்.

இரவு மணி இரண்டு இருக்கும். திடீரென்று வெளியில் அழுகையும், இரைச்சலுமககக் கேட்கவுமே சட்டென்று விழித்துக் கொண்ட லிஸியா ஜன்னலை திறந்து பார்த்தாள், எதிர் வரிசையில் உள்ள சில வீடுகள் தீப்பற்றி எரிந்து கொண்டிருந்தன. நிமிட நேரத்தில் அவளுக்கு எல்லாம் புரிந்து விட்டது. அவளைப் போலவே ஒன்றிரண்டு சிங்களவர்களைத் தவிர ஐம்பதுக்கும் மேற்பட்ட வீடுகளில் தமிழர்களே இருந்தனர். அத்தனை பேரும் தோட்ட வேலைக்காரர்கள். அவர்களைத் தான் ஒழித்துக்கட்டி கொண்டிருந்தனர் கலவரக்காரர்கள். லிசியாவிற்கு புரிந்து விட்டது. இனி அவர்கள் மத்தியில் சிக்கிக்கொண்டுள்ள தன் கதி என்ன? தன்னை யாருக்கு தெரியும் தப்புவிக்க. ஐயோ இந்த பிள்ளை இந்த சமயத்திலா என்னிடம் வந்து சேர வேண்டும் என்றெல்லாம் பலவாறாக எண்ணிக் கொண்டிருந்தாள். கதவு தட்டப்படும் ஓசை கேட்டதும் திடுக்கிட்டுப் போனாள்.

அசந்து தூங்கிக் கொண்டிருந்த அருணகிரியை அப்படியும் இப்படியும் அசைத்து எழுப்பினாள். வாசற் கதவு தட்டப்படும் ஓசை வர வர அதிகரித்தது.

லிஸியா வாயின்மேல் ஆள்காட்டி விரலை வைத்து மவுனமாக அருணகிரியை அழைத்துச் சென்று ஒரு பத்திரமான இடத்தில் ஒளித்துவிட்டு வந்து, கையில் குழந்தையை எடுத்துக் கொண்டபடி சென்று கதவைத் திறந்தாள்.

எதிரே இரண்டு ராணுவத்தினர்கள் நின்று கொண்டு, “உள்ளே யார் இருக்கிறார்கள்,” என்று கர்ஜித்தார்கள்.

“என்னையும் குழந்தையும் தவிர வேறுயாரும் இல்லை. என் கணவர் கூட இறந்துவிட்டார்.” என்று சிங்கள மொழியில் கூறினாள். அதையும் நம்பாத அவர்கள் தங்களது பூட்ஸ் காலால் நாற்காலிகளையும், மேஜைகளையும் உதைத்தபடி அங்குமிங்கும் சுற்றிப் பார்த்துவிடடு ஒன்றும் பேசாமல் வெளியேறி விட்டனர்.

அவர்கள் போனதும் வேகமாக சென்று கதவைத் தாளிட்டுக்கொண்டு வந்தாள் லிஸியா. ஒரு கண்டத்திலிருந்து தப்பினோம். இனி அருணகிரியை அழைத்து வரலாம் என்று அவள் உள்ளே திரும்பினாள்.

சிறிது நேரத்தில் மூங்கில்கள் வெடித்துச் சிதறுவது போன்ற ஓசையும், புகைநாற்றமும் எழுந்தது. அப்படியே ‘வீல்’ என்று தன்னையும் மீறி அலறி விட்டாள் லிஸியா, அவளது வீட்டுக்கூரைபாதிக்கு மேல் பக்கத்து வீட்டோடு சேர்ந்து எரிந்து கொண்டிருந்தது.

லிஸியாவின் அலறலைக் கேட்டு திடுக்கிட்டு எழுந்த அருணகிரி வீடு பற்றி எரிவதைப் பார்த்து பயந்து நடுங்கினாள்.

லிலியா தன் குழந்தையை மார்போடு அனைத்தபடி சுவர் ஓரமாக ஒட்டி நின்று கொண்டிருந்தாள்.

என்ன செய்வது என்று ஒன்றும் புரியாமல் திகைத்து நின்று கொண்டிருந்த லிசியாவிற்கு அருணகிரி தைரியம் சொன்னான். அங்குமிங்கும் தாறுமாறாக எரிந்து கொண்டிருக்கும் நெருப்பைத் தாண்டிச் சென்று வாசற்கதவை அகலத்திறந்து வைத்துவிட்டு வந்தான்.

குழந்தையை சுமந்தபடி ஓரமாக நிற்கும் லிசியாவின் கரத்தைப் பற்றி இழுத்தபடி “தைரியமாக வாருங்கள்; நாலே எட்டில் வாசல் வழியாக ஓடி வெளியே போய்விடலாம்” என்று அவளையும் இழுத்தபடி முன்னே சென்றான்.

அப்போது