நபிகள் நாயகம்-சரித்திர நிகழ்ச்சிகள்/தீர்க்கதரிசிகள் தோன்றினார்கள்

22. தீர்க்கதரிசி தோன்றினார்கள்

வரக்கா வேதங்களை ஆராய்ச்சி செய்ததில், அண்மையில், அரேபியாவில் தீர்க்கதரிசி ஒருவர் தோன்றுவார் என்பது தெரிந்து, அவர் அதை எதிர்பார்த்துக் கொண்டிருந்தார். அவர் பெருமானார் அவர்களைச் சந்தித்த போது:

“வரக்காவின் உயிரானது, யாருடைய கையில் இருக்கிறதோ அவன் பேரில் சத்தியமாகச் சொல்லுகிறேன். ஆண்டவன், இந்த மக்களுக்கு உம்மை நபியாகத் தேர்ந்தெடுத்திருக்கிறான். தெய்வீகச் செய்திகளை அறிவிக்கக் கூடிய தூதர் உம்மிடம் வந்திருக்கிறார். இந்த மக்கள் உம்மைப் பொய்யன் என்று சொல்வார்கள். உமக்கு இன்னல் விளைவிப்பார்கள். நாட்டை விட்டுத் துரத்துவார்கள். உமக்கு விரோதமாகச் சண்டை செய்வார்கள். அவ்வாறு நடைபெறக் கூடிய நாளில் நான் உயிரோடு இருப்பேனாகில், உமக்காக ஆண்டவன் பாதையில் உதவி செய்வேன். நான் அவ்வாறு செய்பவன் என்பதை ஆண்டவன் அறிவான்!” எனக் கூறினார்.