நபிகள் நாயகம்-சரித்திர நிகழ்ச்சிகள்

இப்புத்தகத்தை Mobi(kindle) வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை EPUB வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை RTF வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை PDF வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை txt வடிவில் பதிவிறக்குக. - இவ்வடிவில் பதிவிறக்குக




உலகளாவிய பொதுக் கள உரிமம் (CC0 1.0)
இது சட்ட ஏற்புடைய உரிமத்தின் சுருக்கம் மட்டுமே. முழு உரையை https://creativecommons.org/publicdomain/zero/1.0/legalcode என்ற முகவரியில் காணலாம்.


பதிப்புரிமை அற்றது

இந்த ஆக்கத்துடன் தொடர்புடையவர்கள், உலகளளாவிய பொதுப் பயன்பாட்டுக்கு என பதிப்புரிமைச் சட்டத்துக்கு உட்பட்டு, தங்கள் அனைத்துப் பதிப்புரிமைகளையும் விடுவித்துள்ளனர்.

நீங்கள் இவ்வாக்கத்தைப் படியெடுக்கலாம்; மேம்படுத்தலாம்; பகிரலாம்; வேறு வடிவமாக மாற்றலாம்; வணிகப் பயன்களும் அடையலாம். இவற்றுக்கு நீங்கள் ஒப்புதல் ஏதும் கோரத் தேவையில்லை.

***
இது, உலகத் தமிழ் விக்கியூடகச் சமூகமும் ( https://ta.wikisource.org ), தமிழ் இணையக் கல்விக் கழகமும் ( http://tamilvu.org ) இணைந்த கூட்டுமுயற்சியில், பதிவேற்றிய நூல்களில் ஒன்று. இக்கூட்டு முயற்சியைப் பற்றி, https://ta.wikisource.org/s/4kx என்ற முகவரியில் விரிவாகக் காணலாம்.
Universal (CC0 1.0) Public Domain Dedication

This is a human readable summary of the legal code found at https://creativecommons.org/publicdomain/zero/1.0/legalcode


No Copyright

The person who associated a work with this deed has dedicated the work to the public domain by waiving all of his or her rights to the work worldwide under copyright law including all related and neighboring rights, to the extent allowed by law.

You can copy, modify, distribute and perform the work even for commercial purposes, all without asking permission.
***
This book is uploaded as part of the collaboration between Global Tamil Wikimedia Community

( https://ta.wikisource.org ) and Tamil Virtual Academy ( http://tamilvu.org ). More details about this collaboration can be found at https://ta.wikisource.org/s/4kx.

அருளாளனும் அன்புடையோனும் ஆகிய அல்லாவின் திருப்பெயரால்

நபிகள் நாயகம் அவர்கள் சரித்திர நிகழ்ச்சிகள்

நபிகள் நாயகம் அவர்களின் பெரு வாழ்வு தனித்தனியாக 207 நிகழ்ச்சிகளில் விவரிக்கப்பட்டுள்ளது


ஆசிரியர்கள்

எம்கே.ஈ. மவ்லானா

முல்லை முத்தையா


முல்லை
பதிப்பகம்
323/10, கதிரவன் காலனி,
அண்ணா நகர் மேற்கு,
சென்னை - 600 040

BIBLIOGRAPHICAL DATA
Title                : Nabigal Nayagam Avargalin Charitra Nigalchigal
Authors              : MK.E. Moulana & 
                       Mullai Muthiah
Language             : Tamil
Edition              : First
Date of Publication  : June 2003
Copyright holders    : MK.E. Moulana & 
                       Mullai Muthiah
Paper used           : 11.6 Kg. White Printing 
Number of Pages      : XVI + 268 = 280 
Number of Copies     : 1200
Printers             : Zion Printers, Ch - 28
Binding              : Section Stitching
Price                : Rs. 70/- (Rupees Seventy)
Subject              : Historical incidents with Life of Prophet Mohammed (Sal)
Publishers           : Mullai Pathippagam 
                       323/10, Kathiravan Colony, 
                       Annanagar West, Ch-40. 
                       Ph: 26163596 | 24715968 

பன்மொழிப் பேராசிரியர், பல நூல்களின் ஆசிரியர், இஸ்லாமியப் பேரறிஞர் மெளலானா, மெளலவி எம். அப்துல் வஹ்ஹாப் சாகிபு M.A., B.Th அவர்களின் அணிந்துரை

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.

நஹ்மதுஹு வ நுஸல்லீ அலா ரஸூலிஹில் கரீம்.


“...(நம்) தூதர் (ஸல்) உங்களுக்கு எதைக் கொடுக்கின்றாரோ, அதை ஏற்றுக் கொள்ளுங்கள்; எதை விட்டும் உங்களை விலக்குகின்றாரோ, அதை விட்டும் விலகிக் கொள்ளுங்கள்...” (59:7) என்று இறைவன் தன் திருமறையில் அறிவுறுத்துகிறான்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கொடுத்ததையும், விலக்கியதையுங் கொண்ட அறிவுக் கருவூலம் “ஹதீது” என்று பொதுவாகக் குறிப்பிடப்படும். அவை உலக மாந்தரினம் முழுமைக்கும், எல்லா நிலைகளிலும் பயன்படக் கூடியவை. ஏனெனில் அவர்கள் வாழ்க்கையில், அனைத்துத் துறைகளிலும் மனுக் குலத்துக்கு அழகிய முன் மாதிரியாகத் திகழ்ந்தவர்கள்.

“தந்தைதா யிழந்த தனயராய்க், குடும்பத் தலைவராய்,
வணிகராய்த் தரும தவராய்:
நந்திடாச் சமய குரவராய்த் தரும நாதராய்;
நரபதி, ராஜ்ய
தந்திரி, அறப் போர்த் தளபதி, எனினும் தாசர்க்கும்
தாசராய், இணையில்
அந்திய நபியாய் அஹ்மதிவ்வுலகுக்கு அளித்துள
ஞானமே ஞானம்!”

என்று நபி பெருமானாரின்(ஸல்) ஈடு இணையில்லாத இந்த முன் மாதிரித்துவத்தை ஓர் அரிய கவிதையில் சித்தரிக்கின்றார்கள் மறைந்த மாகவிஞர் ம.கா.மு. காதிறு முஹிய்யித்ன் மரைக்காயர் (ரஹ்) அவர்கள்.

நபிகள் பெருமானார் (ஸல்) போதித்த அனைத்தும் அவர்களுடைய தீர்க்கதரிசன வாழ்க்கையிலும், உபதேசங்களிலும், செயல் முறைகளிலும், உன்னதமான முறையில் விளக்கிக் காட்டப்பட்டுள்ளன. அவர்களின் போதனைகள், அவர்களின் வாய்ப் பேச்சுகளில் மட்டும் அடங்கியிருந்தால், அதை நம்முடைய அன்றாட வாழ்க்கைக்குத் துணை செய்வனவாக அமைவதில் சிரமங்கள் ஏற்படும். எனவே நபி பெருமானாரின் “ஸுனன்” என்னும் செயல் முறைகளே, அவர்களுடைய போதனைகளைச் செயல்படுத்தும் ஒழுங்கை நமக்குக் கற்றுத் தருகின்றன.

இச்செயல் முறைகள் பல்வேறு களங்களில் நிகழ்ந்திருக்கின்றன. இச்சுவையான நிகழ்ச்சிகளில் சிலவற்றைத் தொகுத்து, இனிமையான தமிழில் நமக்கு எடுத்துத் தருகிறார்கள் பசுங்கதிர் எம்கே.ஈ. மவ்லானா அவர்களும், பழம் பெரும் எழுத்தாளரான முல்லை முத்தையா அவர்களும்.

பசுங்கதிர் மவ்லானா அவர்களின் “சேது முதல் சிந்து வரை” என்ற ஆய்வு நூலுக்கு முதற் பரிசு கொடுத்திருக்கிறது தமிழ் வளர்ச்சிக் கழகம். எனவே அவர்களுடைய எழுத்தாற்றலைப் பற்றி நான் எடுத்தெழுத வேண்டியதில்லை.

முல்லை முத்தையா அவர்கள் நாற்பது ஆண்டுகளாகத் தமிழ் எழுத்துலகில் தன்னிகரற்ற ஓர் இடத்தை வகித்து வருகிறார். சொற் சிக்கனமும், சுவையும், பயனும் மிக்க ஒரு நூல் நடையை தமதாக்கிக் கொண்ட, அருமையான எழுத்தாளர் அவர் ஏற்கெனவே பல அரிய நூல்களைத் தமிழ் கூறும் நல்லுலகத்துக்குத் தந்தவர்.

இந்த நூலை ஆழ்ந்த கவனத்துடன் படித்துப் பார்க்கும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது. அத்துடன் இதற்கு அணிந்துரை எழுதும் ஒரு நல்வாய்ப்பும் எனக்குக் கிட்டிற்று. அல்ஹம்து லில்லாஹ்

இத்தகைய சிறப்பான ஒரு நூலை, சீரிய முறையில் அமைத்து, வாசகர்களுக்கு வழங்கும் நூலாசிரியர்களை வாழ்த்துகிறேன். பாராட்டுகிறேன். நம் வாசகர்கள் இதை உளமார வரவேற்பார்கள் எனப் பெரிதும் நம்புகிறேன்.

சென்னை-600 016
அப்துல் வஹ்ஹாப்
ஆசிரியர் : “பிறை”

மயிலாடுதுறை, ஏ.வி.ஸி. கல்லூரியின் சரித்திரப் பேராசிரியர் உயர்திரு. H. அமீர் அலி M.A., M.Ed; அவர்களின் பாராட்டுரை

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உலகிற்குப் புதிய புரட்சியை தோற்றுவித்தவர்கள்; புதுமையான தத்துவக் கருத்துக்களையும், அறக் கோட்பாடுகளையும் புகட்டி, தாமே பின்பற்றி ஒழுகிக் காட்டியவர்கள்; சொல்லும் செயலும் ஒன்றி, ஒழுகி, முன்மாதிரியாக நின்றவர்கள்: அன்பிலும், பண்பிலும், போரிலும், அமைதியிலும், நட்பிலும், சீலத்திலும், அணிகலனாகத் திகழ்ந்தவர்கள்; உற்றார், உறவினர், அயலார், பிற சமயத்தார் என்ற பாகுபாடின்றி அனைவரிடமும் நேசக்கரத்தை நீட்டி, புதியதோர் அரசை உருவாக்கி அனைவருக்கும் மதிப்பையும் உயர்வையும் அளித்தவர்கள்; “தாயின் காலடியில், சுவர்க்கம் உள்ளது” என்று மொழிந்து, தாயின் பெருமையையும் உலகிலேயே பெண்ணுக்குச் சொத்துரிமையையும் அளித்துப் பெண்ணுரிமையைப் போற்றியவர்கள்; “பணி செய்தவனின் வியர்வை உலர்வதற்கு முன்பே, அவன் கூலியைக் கொடுத்து விடுங்கள்.” என்று இதமாகக் கூறி, உழைப்பின் உயர்வை வலியுறுத்தியவர்கள்; “அடுத்த வீட்டுக்காரன் பசித்திருக்கும் பொழுது, நாம் விருந்து உண்பது தடுக்கப்பட வேண்டியது” என்று அறிவுரை கூறி, ஏழையின் பட்டினியையும், வறுமையையும் சுட்டிக் காட்டி, அதனை நீக்கும் வழிமுறைகளையும் அளித்தவர்கள்: எதிரிகளை வெற்றி கொண்ட போதிலும், அவர்களை மன்னித்த பெருந்தகை; உலக வரலாற்றிலேயே, அடிமைத் தனத்தை ஒழித்த முதலாவது சமுதாயச் சிற்பி-அடிமைகளுக்கு விடுதலை அளித்த ஏந்தல்; மறை தந்த இறைதூதர்; புதியதோர் சமுதாயத்தையும், புதியதோர் நாகரிகத்தையும், உலகின் ஒளிவிளக்காக விட்டுச் சென்ற சீர்திருத்தச் செம்மல், நபி நாயகம் அவர்களின் நாமம் ஊழி ஊழிகாலமாக நிலைத்து நிற்கின்றது. நிலைத்து நிற்கும்; நிலைத்து நிற்குமாக எல்லாம் வல்ல அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் அவர்கள் மீது உண்டாவதாக!

நபி நாயகத்தின்(ஸல்) வரலாற்றைப் பல அறிஞர்கள் எழுதியுள்ளார்கள். ஆனால், இந்நூலை இயற்றியுள்ள திரு. முல்லை முத்தையா அவர்களும், ஜனாப் எம் கே. ஈ. மவ்லானா அவர்களும், வரலாற்றை வேறு புதிய கோணத்திலிருந்து ஆய்ந்துள்ளார்கள். காலக் கண்ணாடியின் அடிப்படையில் வரலாற்றைக் கூறாமல், மாநபி(ஸல்) அவர்களின் வாழ்க்கை நிகழ்ச்சிகளைக் குறிப்பிட்டு, அவற்றால் மனிதன் பெற வேண்டிய நற்பண்புகள் யாவை, படிப்பினைகள் எவை என்ற அகன்ற அடிப்படையில் ஆய்ந்து இந்நூலை இணைந்து இயற்றியுள்ளார்கள். இஸ்லாமியர்கள் மட்டுமின்றி, பொதுவாக தமிழ் நல்லுலகினர் அனைவரும் படித்து இன்புறுவதற்காகவே இந்நூலைப் புதிய முறையில் எழுதியுள்ளார்கள்.

திரு. முல்லை முத்தையா அவர்கள் தமிழ் நூல்களின் ஆசிரியராகவும், பதிப்பாளராகவும் தம் வாழ்நாட்களை அர்ப்பணித்தவர்கள்; சிறந்த தமிழ் வல்லுநர்; வாழ்க்கைச் சுமைகளிடையே மதிப்பு, பொறுப்பு, தாங்கொணாத நஷ்டங்களைச் சுமத்திய நிலையில் நபிகள் நாயகத்தின்(ஸல்) வரலாற்றை ஆய்ந்து, மனம் உருகி, மனம் ஒன்றி, இந்நூலை இயற்றியுள்ளார்கள்.

தமிழ்த் தென்றல் போல, சுவையான செய்திகளைப் பசுமையாகவே தரத் தக்க ஆற்றல் படைத்த “பசுங்கதிர்" ஆசிரியர், கலாநிதி ஞானக் கவிச்சித்தர் எம்கே.ஈ. மவ்லானா அவர்களை இஸ்லாமிய உலகும், பத்திரிகை உலகும் நன்கு அறியும். நல்ல தமிழ் எழுத்தாற்றல் படைத்தவர்கள்; பல நூல்களை எழுதியவர்கள்; அவர்களும் இணைந்து இந்நூலை எழுதியுள்ளார்கள்.

இந்நூல் பற்பல பதிப்பாக, மலர்வதற்கு எல்லாம் வல்ல அல்லாஹ்விடத்தில் இறைஞ்சி “துஆ” செய்தவனாக, இந்நூலுக்கு என் பாராட்டுரையை அளிக்கின்றேன். ஆமின்!

ஹ.அமிர் அலி

முன்னுரை

“நற்காரியங்கள் எப்பொழுதும் நன்மை தரும்!” என்பதற்கேற்ப, “நபிகள் நாயகம் அவர்களின் சரித்திர நிகழ்ச்சிகளை" எழுதி வெளியிடும் நல்வாய்ப்பு எங்களுக்குக் கிடைத்ததை எண்ணி, எண்ணி உள்ளம் பூரிக்கின்றோம்.

பெருமானார் அவர்கள் வரலாற்றை உலக முழுவதிலும் உள்ள அறிஞர்கள் எழுதிப் பெருமை பெற்றிருக்கின்றனர். மேலும், மேலும் எழுதுவார்கள். ஆயினும், இந்நூல் சரித்திரத் தொடர்புடைய சம்பவங்களைச் சுருக்கமாகத் தெளிவாக, சுவையாகக் கற்றோரும் மற்றோரும் படித்து மகிழத் தக்கவாறு எழுதியுள்ளோம்.

குறைகள், பிழைகள் காணப்படுமேயானால், அவை எங்களுடையவை ; புகழ் அனைத்தும் ஆண்டவனுக்கே!

பன்மொழிப் பேராசிரியர், பல நூல்களின் ஆசிரியர், பெருமதிப்பிற்குரிய இஸ்லாமியப் பேரறிஞர், மேதை மெளலானா மெளலவி எம். அப்துல் வஹ்ஹாப் சாகிபு M.A. B.Th அவர்கள், தங்களுடைய அரிய பல பணிகளுக்கிடையே இந்நூலைச் சரிபார்த்து உதவி, அணிந்துரை வழங்கியுள்ளார்கள்.

மயிலாடுதுறை ஏ.வி.ஸி. கல்லூரி சரித்திரப் பேராசிரியர், பல நூல்களின் ஆசிரியர், பன்மொழி அறிஞர் ஜனாப் அமீர் அலி M.A., M.Ed அவர்கள் ஆரம்பத்திலிருந்தே இந்நூலில் உற்சாகம் காட்டியதோடு, பாராட்டுரையும் அளித்திருக்கின்றார்கள்.

இத்தகைய நூலை எழுதத் தூண்டியவர்கள் பலர். அவர்களுள் அன்புசால் சொ.மு.க. ஹமீது ஜலால் அவர்களும், டாக்டர் ஹக்கீம் MM முஸ்தபா அவர்களும் குறிப்பிடத்தக்கவர்கள்.

மற்றும், பல வகையில் உதவி புரிந்த வர்த்தகப் பிரமுகர்கள்: குறிப்பாக, சீதக்காதி அறக்கட்டளை நிறுவனத்தினர், அச்சிட்டுக் கொடுத்தவர்கள் ஆகிய அனைவருக்கும் எங்களுடைய இதயம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.


சென்னை-600 001
எம்கே. ஈ.மவ்லானா
முல்லை முத்தையா

பதிப்புரை

1999ல் “மாணவர்களுக்கு நபிகள் நாயகம் வரலாறு” என்னும் நூலை வெளியிட்டோம், அதைத் தொடர்ந்து,

இப்பொழுது பெருமைமிகு “நபிகள் நாயகம் அவர்களின் சரித்திர நிகழ்ச்சிகள்” என்னும் புதுமைப் பொலிவான இந்நூலை மகிழ்வோடு வெளியிடுகின்றோம்.

இந்நூலை மதிப்புக்கு உரிய மவலானா அவர்களும், பயன்மிகு நூல்கள் பலவற்றை எழுதிப் புகழ் பெற்ற அறிஞர் முல்லை முத்தையா அவர்களும் புதிய முறையில், இனிய தமிழில், அனைவரும் படித்து உணரத் தக்கவாறு எழுதியுள்ளனர். அவர்களுக்கு எங்கள் நன்றி

முல்லை பதிப்பகம்

உள்ளுறை
1. 18
2. 19
3. 19
4. 20
5. 20
6. 20
7. 21
8. 22
9. 23
10. 24
11. 24
12. 25
13. 26
14. 27
15. 27
16. 29
17. 29
18. 30
19. 31
20. 32
21. 34
22. 34
23. 35
24. 36
25. 37
26. 38
27. 38
28. 40
29. 41
30. 43
31. 44
32. 45
33. 46
34. 49
35. 50
36. 51
37. 53
38. 54
39. 56
40. 57
41. 58
42. 59
43. 60
44. 61
45. 62
46. 63
47. 65
48. 67
49. 68
50. 69
51. 70
52. 71
53. 73
54. 74
55. 75
56. 76
57. 77
58. 78
59. 79
60. 80
61. 81
62. 82
63. 83
64. 84
65. 86
66. 86
67. 87
68. 88
69. 89
70. 90
71. 92
72. 93
73. 93
74. 95
75. 96
76. 98
77. 99
78. 100
79. 102
80. 103
81. 103
82. 105
83. 107
84. 110
85. 112
86. 113
87. 114
88. 115
89. 116
90. 117
91. 118
92. 120
93. 120
94. 121
95. 122
96. 123
97. 125
98. 127
99. 129
100. 131
101. 133
102. 134
103. 135
104. 136
105. 138
106. 140
107. 142
108. 144
109. 145
110. 146
111. 149
112. 150
113. 151
114. 152
115. 153
116. 154
117. 155
118. 157
119. 159
120. 160
121. 161
122. 162
123. 163
124. 166
125. 167
126. 168
127. 169
128. 170
129. 172
130. 173
131. 174
132. 175
133. 175
134. 177
135. 178
136. 181
137. 183
138. 184
139. 185
140. 187
141. 188
142. 190
143. 191
144. 193
145. 194
146. 195
147. 196
148. 198
149. 199
150. 201
151. 202
152. 203
153. 205
154. 205
155. 206
156. 207
157. 208
158. 210
159. 211
160. 212
161. 213
162. 214
163. 215
164. 216
165. 216
166. 217
167. 218
168. 218
169. 219
170. 221
171. 221
172. 223
173. 225
174. 226
175. 227
176. 228
177. 229
178. 230
179. 231
180. 232
181. 232
182. 233
183. 235
184. 235
185. 236
186. 238
187. 239
188. 241
189. 242
190. 243
191. 246
192. 247
193. 248
194. 251
195. 252
196. 254
197. 256

 ஸதக்கதுல்லா அப்பா அவர்கள் 17-வது நூற்றாண்டில், 84 வயது வரை வாழ்ந்த மகான். வள்ளல் சீதக்காதிக்கும், உமறுப்புலவருக்கும் குருவாய் அமைந்தவர்கள். அவர்கள் அரபியில் பாடிய வித்ரிய்யா என்னும் நூலில் உள்ள கருத்து:

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைப் போற்றி மகிழும் பொருட்டு, ஹஜ் யாத்திரை செல்பவர்கள் தாம் ஊர்ந்து செல்லும் ஒட்டகங்களுக்கு ஏற்படும் களைப்பினை நீக்க, அவை அந்தச் சமாதியினை நோக்குமாறு செய்ய, அவற்றின் கழுத்துகளை அந்தப் பக்கமாகத் திரும்பும்படி லகானைச் சாய்க்கிறார்கள்.

ஒருநாள் சொர்க்கத்தில் அவர்களைச் சந்திக்க நேரிடும்போது வெட்கி, முகஞ் சுருங்கிச் சிவந்து நிற்க நேரிடுமே! அப்படி நேராமல் இருப்பதற்காக, அப்பெருமானாரின் திருவிடத்தைத் தரிசனம் செய்து கொள்ளுங்கள். உடனே என்னையும் அங்கே போக விடுங்கள். நான் ஏன் அவ்வளவு அவசரப்படுகிறேன் என்றால், அந்தத் திருவிடத்தைத் தரிசிப்பது புனித ஹஜ் யாத்திரை செய்வதில் அடங்கியிருக்கும் கட்டாயக்கடமை எனக் கருதுகிறேன்.

ஓ! மதினாவைக் காண ஆவலுறும் மக்களே! உங்கள் உடலை விட்டு உயிர் பிரியுமுன், மதீனாவுக்குச் செல்லுங்கள்; அங்கே நபிகள் நாயகம் அவர்களின் நல்லுடல் அடங்கியிருக்கும் திருவிடத்துக்குச் செல்லும் வழியைக் கண்டு, விரைந்து சென்று உங்கள் வாகனங்களாகிய ஒட்டகங்களை அங்கே நிறுத்துவீர்களாக!

*

யார்? எவர்?

நபிகள் நாயகம் அவர்களின் வரலாற்று நிகழ்ச்சிகளில் தொடர்புடையோர் எண்ணற்றோர். அவர்களில் சிலரைப் பற்றிய சிறு குறிப்புகளை இங்கே காணலாம். வாசகர்களுக்கு ஓரளவு பயன் தரும்.

அப்துல் முத்தலிப்-குறைஷித் தலைவர். ஹாஷிமுக்கும், யத்ரிபில் வர்த்தகம் செய்துகொண்டிருந்த ஸல்மாவுக்கும், கி.பி.497ல் மக்காவில் பிறந்தார்; யத்ரிபில் தம் தாயிடமே வளர்ந்தார். பின்னர், இஸ்மாயில் (அலை) அவர்களின் வில் அம்பும், கஃபாவின் திறவு கோலும் இவரிடம் ஒப்புவிக்கப்பட்டன. தண்ணீர்ப் பஞ்சத்தின் போது, கனவில் அறிவுறுத்தப்பட்டு, ஜம்ஜம் கிணற்றைத் தூர் எடுத்துத் தோண்டியவர். இவருக்கு மொத்தம் பதினான்கு ஆண் மக்களும், ஏழு பெண் மக்களும் பிறந்தனர். நபிகள் நாயகம் அவர்கள் தந்தை அப்துல்லாஹ், இவருடைய குமாரர்களில் ஒருவர். நாயகம் அவர்களை இளமையில் வளர்த்தவர் இவரே.

அப்துல்லாஹ்-இவர் நாயகம் அவர்களின் தந்தை. இவரும் ஸுபைரும், அபுதாலிபும் ஒரே தாய் வயிற்றில் பிறந்தவர்கள். இவர் கி.பி.545-வது ஆண்டில் பிறந்தவர்.

அப்துல்லாஹ் இப்னு உபை-மதீனாவில் கஸ்ரஜ் கோத்திரத்தைச் சேர்ந்தவர். ஒளஸ்களுக்கும் கஸ்ரஜ்களுக்கும் நிகழ்ந்த புஆத் போரில் இவர் நடுநிலைமை வகித்தார். அதனால் இரு கட்சிகளிலும் இவருக்குச் செல்வாக்கு இருந்தது. இரு கட்சியினரும், இவரைத் தங்களுடைய அரசனாக முடிசூட்ட முயன்று தாமதமாயிற்று. நாயகம் அவர்கள் வந்த பின்னர், இவருடைய செல்வாக்கு மங்கத் தொடங்கியது. அதனால் அவர்கள் மீது வெறுப்புக் கொண்டார். வெளியில் காட்டிக் கொள்ளாமல் நட்புறவு போல் காட்டினார். பத்ருப் போருக்குப் பின் தம் நண்பர்களுடன் இஸ்லாத்தில் இணைந்தார். உஹத் போரில் ஒத்துழைக்காமல், துரோக சிந்தையால் பின் வாங்கி விட்டார். தபூக் போரில் மக்கள் சேராதவாறு

மன்றமுகமாகச் சூழ்ச்சி செய்தார். மரணத் தறுவாயில் தமக்குப் போர்த்த மேலங்கியும், தமக்காகப் பாவமன்னிப்புக் கோரிப் பிரார்த்திக்க வேண்டும் எனவும் பெருமானாரிடம் வேண்டிக் கொண்டார். பெருமானார் அவ்வாறே நிறைவேற்றினார்கள்.

அப்துல்லாஹ் இப்னு ஜஷ்ஹ்-இவர் பெருமானார் அவர்களின் அத்தை உமைமாவின் மகன், இவருடைய சகோதரி ஜைனப்பை பெருமானார் பின்னர் மணஞ் செய்து கொண்டனர். குறைஷிகள் யுத்தத்துக்கு ஆயத்தமாகிக் கொண்டிருப்பதை அறிந்து வருமாறு இவரையும், வேறு சிலரையும் பெருமானார் அனுப்பி வைத்தனர். ஆனால், அவர்களுடைய கட்டளைக்குப் பின்னர், பல பதவிகளை ஏற்றுத் திறமையாகச் செயல்பட்டனர்.

அப்துல்லாஹ் இப்னு ரவாஹா-மதீனாவிலுள்ள கஸ்ரஜ் கோத்திரத்தைச் சேர்ந்தவர். சிறந்த வீரர்: கல்வி அறிவுள்ளவர். இவரைப் பெருமானார் தங்களுடைய எழுத்தராக நியமித்தனர். பெருமானார் மதீனா வந்த புதிதில், அவர்களை வரவேற்று, அருளுரை கூறுமாறு கேட்டுக் கொண்டார். போரில் தலைமை வகித்து, வீரப் போர் செய்து உயிர் நீத்தார்.

அப்துல் ரஹ்மான் இப்னு அவ்பு- முதன் முதலில் இஸ்லாத்தைத் தழுவியவர்களுள் இவரும் ஒருவர். மதீனாவில் குடியேறினார். இவரிடம் செல்வம் குவிந்து கொண்டிருந்தது. வாரி வாரி வழங்கினார். பத்ரு, உஹத் போர்களில் கலந்து வீரப் போர் புரிந்தவர். நபிகள் நாயகம் அவர்கள் இவரிடம் மிக அன்பு கொண்டிருந்தார்கள். நபிகள் பெருமானார் பிறந்த போது, முதன்முதலில் அவர்களைக் கையிலேந்தும் பாக்கியம் பெற்றவர் இவருடைய அன்னையாராவர். பின்னர் உத்மான் (ரலி) மூன்றாவது கலீபாவாகத் தேர்வு பெறுவதற்குக் காரணமாக இருந்தவர்.

அபுல் ஆஸ்-இவர் கதீஜா (ரலி) அவர்களின் சகோதரி ஹாலாவின் மகன். இவருக்கு நாயகம் அவர்கள், தங்கள் மகள் ஜைனபை மணஞ் செய்து வைத்தார்கள். இவர் குறைஷிகளின் போர்



அணியில் நின்று சிறைப்பட்டார். நாணயமானவர். பின்னர் மதீனா வந்து இஸ்லாத்தைத் தழுவினார்.

அபுல் பஸீர்-முஸ்லிம்களுக்குப் பாதகமானது என்று கருதப்பட்ட ஹதைபிய்யா உடன்படிக்கையைத் தம் நடவடிக்கைகளினால், குறைஷிகளே வாபஸ் பெறக் கோரும் அளவுக்கு வீர சாகலங்கள் செய்த அஞ்சா நெஞ்சத்தினர்.

அபூ அய்யூப் அன்ஸாரி-மதீனாவில் வாழ்ந்தவர். இவருடைய இல்லத்திலேதான் பெருமானார் அவர்கள் தற்காலிகமாகத் தங்கினார்கள். அவர்களுக்கு உணவு அளித்து, மீந்ததை இவரும் மனைவியும் உண்பார்கள். பெருமானார் அவர்கள் நிகழ்த்திய போர்கள் அனைத்திலும் இவர் கலந்து கொண்டிருக்கிறார்.

அபூ ஆமீர்-மதீனாவில் வாழ்ந்தவர். பெருமானார் மதீனா வந்து பெற்ற மதிப்பைக் கண்டு, டொறாமைப்பட்டு மக்காவுக்கு ஓடினார். பெருமானார் தீர்க்க தரிசனமாகக் கூறியதற்கொப்ப இவர் தாயிபுக்கு ஓடி, பிறகு ஸிரியாவில் அகதியாகத் திரிந்து இறந்தார்.

அபூ தல்ஹா-இவர் மணக்க விரும்பிய உம்மு ஸலீம், “நீர் இஸ்லாத்தைத் தழுவினால்தான் மணப்பேன்” என்று கூறியதற்கு இணங்க, இவர் இஸ்லாத்தைத் தழுவினார். நாயகம் அவர்கள் நிகழ்த்திய எல்லாப் போர்களிலும் இவர் கலந்து கொண்டிருக்கிறார். உஹத் போரில், பெருமானார் அவர்களை எதிரிகள் சூழ்ந்த சமயம், அரண் போல் காத்து வீரமாகப் போராடினார். அம்புகள் தாக்கி இவருடைய சில விரல்கள் உடைந்தன. இவரைப் பற்றிப் பெருமானார் அவர்கள், “சுவர்க்க வாசிகளை இவ்வுலகில் காண விரும்புவோர் அபூ தல்ஹாவைக் கண்டு கொள்ளுங்கள்” என்று கூறியுள்ளனர்.

அபூ தாலிப்-இவரும், நாயகம் அவர்களின் தந்தை அப்துல்லாஹ்வும் ஒரே தாய் வயிற்றில் பிறந்தவர்கள். அப்துல்லாஹ் மறைவுக்குப் பின், பெரிய தந்தையான இவர் நாயகம் அவர்களை வளர்க்கும் பொறுப்பை ஏற்றவர். நேர்மையும், பொறுப்பும், அன்பும் மிக்கவர்.



அபூ பக்கர்-செல்வாக்குள்ள குறைஷி குடும்பத்தில் பிறந்தவர். பெருமானார் அவர்களுக்கு மூன்று வயது இளையவர். எப்பொழுதும் பெருமானாருடனேயே இணைந்து இருந்தவர். பெருமானார் இறைவனுடைய தூதர் என்பதில் உறுதியான நம்பிக்கை கொண்டிருந்தார். துணிவுள்ளவர். இஸ்லாத்துக்காக, அவர் அனுபவித்த துன்பங்கள் பல. தம் உயிரையே இழக்கத் தயாரானவர். ஆயிஷா நாச்சியாரின் தந்தையார். தங்களுக்குப் பிறகு இஸ்லாமிய அரசின் தலைவராக இருக்குமாறு பெருமானார் தேர்ந்தெடுத்த பெருமை பெற்றவர். இவர்கள் வசித்த இடம் மதீனாப் பள்ளியுடன் இணைக்கப்பட்டு, “இது அபூபக்கர் வீடு’ என அரபியில் எழுதப்பட்டுள்ளது. இவர்கள் 63-வது வயதில் உயிர் நீத்தார்கள்.

அபூ லஹப்-அப்துல் முத்தலியின் மகன். பெருமானார் அவர்களுக்குப் பெரிய தந்தை. செல்வந்தர். கல் நெஞ்சம் உடையவர். பெருமானார் அவர்களை இழித்தும், பழித்தும் கூறி எதிர்த்து வந்தார். அவருடைய மனைவியும் அவ்வாறே நடந்து, இறுதியில் வறுமையில் வாடி இறந்தார். அபூலஹபும் தொற்று நோயால் இறந்தார். இவருடைய மக்கள் எவரும் இவரை அடக்கம் செய்ய முன்வரவில்லை.

அபூ ஜந்தல்-இவர் சுஹைல் இப்னு அப்ருவின் மகன். குறைஷிகளின் கொடுமை தாளாமல், ஹுதைபிய்யா உடன்படிக்கையின் போது பெருமானார் அவர்களிடம் ஓடி வந்தார். பிறகு அவர் தந்தையிடமே, அவர் ஒப்புவிக்கப்பட்டார்.

அபூ ஜஹ்லு-மக்ஸூம் கோத்திரத்தில் பிறந்தவன். இஸ்லாத்துக்கும், நாயகம் அவர்களுக்கும் பல கொடுமைகள் புரிந்தவன். பத்ருப் போரில் வெட்டி வீழ்த்தப்பட்டான். இவனுடைய சகோதரர் ஹாரித், பெருமானார் அவர்களின் தோழர்களில் ஒருவராக இருந்தார். இவன் மகன் இக்ரிமா பின்னர் இஸ்லாத்தைத் தழுவி, இஸ்லாத்துக்காகப் போர் புரிந்தார்.

அபூ ஸுப்யான்-பனூ ஹாஷிம்களுக்கு விரோதமான உமையா கோத்திரத்தில் பிறந்தவர். பத்ருப் போருக்குப் பின்



குறைஷிகளுக்குத் தலைமை தாங்கும் பொறுப்பு இவருடையதாயிற்று. இவருடைய மனைவி ஹிந்தாவின் தூண்டுதல் வேறு. இவருடைய எதிர்ப்பு முயற்சிகள் யாவும் தோல்வியுற்றன. அப்பாஸ் அவர்களினால் அபயம் அளிக்கப்பட்டு, நாயகம் அவர்களின் முன்னிலையில் இஸ்லாத்தைத் தழுவினார். அதன்பின், இவருக்குப் பல பதவிகள் அளிக்கப்பட்டன. பெருமானார் அவர்களின் மனைவி உம்மு ஹபீபா இவருடைய மகளாவார். இவர் மரணத் தறுவாயில் உள்ள போது அருகிலுள்ளோரிடம், ”என் பிரிவுக்காக நீங்கள் அழ வேண்டாம். நான் இஸ்லாத்தைத் தழுவிய பின், யாதொரு பாவமும் செய்ததில்லை” என்று கூறினார். தம்முடைய 88-வது வயதில் மதீனாவில் இறந்து, அடக்கம் செய்யப்பட்டார்.

அபூ உபைதா-இஸ்லாத்தின் ஆரம்ப காலத்தில் கடுமையான விரோதியாக இருந்து, அபூபக்கர் (ரலி) தூண்டுதலால் இஸ்லாத்தைத் தழுவினார். பத்ருப் போரில் தம் தந்தையை எதிர்த்துப் போரிட்டுக் கொன்றார்.

அபூ லுபாபா-ஒளஸ் கோத்திரத்தின் தலைவர். யூதர்களின் கோட்டையை முற்றுகையிட்ட போது அவர்கள் கேட்டுக் கொண்டபடி சமாதானப் பேச்சு வார்த்தைக்காக பெருமானார் அவர்கள் இவரை அனுப்பிவைத்தார்கள்.

அப்பாஸ்-அப்துல் முத்தலிபின் மகனான இவர் மக்காவில் பிறந்தவர். நாயகம் அவர்களை விட இரண்டு வயது மூத்தவர். மக்கா வரும் யாத்திரிகர்களுக்கு தண்ணீர் வழங்கும் பொறுப்பு இவர்களுடையதாக இருந்தது. இஸ்லாத்தை இவர் ஆதரித்த போதிலும் அதை வெளிப்படுத்தவில்லை. வற்புறுத்தலால், பத்ருப் போரில் குறைஷிகள் சார்பாகக் கலந்து சிறைப்பட்டார். பின்னர் பெருமானார் முன்னிலையில் இஸ்லாத்தைத் தழுவி, மக்கா சென்று குறைஷிகளின் நடவடிக்கைகளை இரகசியமாகத் தெரிவித்து வந்தார். அவர் மைத்துனி மைமூனாவை பெருமானார் அவர்களுக்கு மணமுடித்து வைத்தார். ஹுனைன் போரில், பெருமானார் இவர்கள் அருகில் நின்று காத்தனர். மக்கா வெற்றியை, இரத்தம்

சிந்தாத வகையில், இவர்கள் மூலழாக ஆக்கி அருளுமாறு இறைவனை இறைஞ்சினார். அபூஸுப்யானுக்குப் பெருமானார் அவர்களிடம் அபயம் பெற்றுத் தந்த பெருமை இவர்களுடையதே. மதீனாப் பள்ளிவாசலை விரிவு படுத்துவதற்காகத் தம் வீட்டை அன்பளிப்பாக வழங்கினார்.

அம்ரு இப்னு ஆஸ்-இவர் பெருமானார் அவர்கள் மீது வசை கவிகள் பாடியவர். அகழ்ப் போருக்குப் பின் இஸ்லாத்தைத் தழுவினார்.

அகீல்-(உகைல்) அபூதாலிபின் இரண்டாவது மகன். இவர் சகோதரர் அலியை விட இருபது வயது மூத்தவர். தந்தையின் பிரியத்துக்கு உரியவர். பத்ருப் போரில் குறைஷிகளின் அணியில் நின்று போர் புரிந்தார். இவருக்கும் அலிக்கும் கருத்து வேறுபாடு உண்டு. பின்னர் இவர் முஸ்லிமானார்.

அர்க்கம்-இவர் கண்ணியமான மக்ஸும் கிளையைச் சேர்ந்த பெரிய செல்வந்தர். இவருடைய விசாலமான இல்லம் இஸ்லாத்தின் செயலகமாக இருந்தது. இயன்ற எல்லா உதவிகளையும் செய்தார். நாயகம் அவர்கள் அந்த வீட்டில் இருந்து ஆலோசனை நடத்தினார்கள். முஸ்லிம்கள் அங்கே தொழுகை நடத்தினார்கள்.

அலி-பெருமானார் அவர்களின் பெரிய தந்தை அபூதாலிபின் நான்காவது மகன். இளம் பருவத்திலியே இவர் பெருமானார் அவர்களிடம் ஒன்றியவர். இளைஞர்களில் முதலில் இஸ்லாத்தைத் தழுவியவர். துணிவும், தியாக உள்ளமும் கொண்டவர். பாத்திமா (ரலி) அவர்களை மணம் செய்து கொண்டவர்.

அதீ-வள்ளல் ஹாத்தியின் மகன். ஸப்ஃவானா, அதீயின் தங்கை. அதீ கிறிஸ்துவக் கூட்டத்துக் தலைவராக இருந்து ஸிரியாவுக்கு ஓடி விட்டார். ஸப்ஃவானா சிறை பிடிக்கப்பட்டார். பெருமானாரிடம் தம் தந்தையைப் பற்றிக் கூறி, மன்னிப்புப் பெற்றார். அதீயையும் கூட்டி வந்து இருவரும் இஸ்லாத்தைத் தழுவினர்.

அன்ஸாரிகள்-மக்காவிலிருந்து குடியேறிய முஸ்லிம்களுக்கு மதீனாவில் வாழ்ந்தவர்கள் ஆதரவு அளித்தார்கள். அதனால்

அவர்களுக்கு அன்ஸாரிகள்-உதவியாளர்கள் எனப் பெயர் வழங்கலாயிற்று.

அனஸ் இப்னு மாலிக்-இவர் மதீனாவின் கஸ்ரஜ் கோத்திரத்தில் பிறந்தவர். இவருடைய தந்தை, இவரை நர்யகம் அவர்களிடம் ஒப்படைத்தார். பத்து ஆண்டுகள் வரை ஊழியத்தில் இருந்து, பல போர்களில் கலந்து கொண்டார்.103 வயது வரை வாழ்ந்தார்.

ஆயிஷா-அபூபக்கர் அவர்களின் மகளார். கதீஜாப் பிராட்டியாரின் பிரிவுக்குப் பின் பெருமானார் அவர்களுக்குத் தொண்டு புரிவதற்காக, அபூபக்கர் தம் மகளைத் திருமணம் செய்து கொடுத்தார்கள்.

இக்ரிமா-இவர் இஸ்லாத்தின் பரம விரோதியான அபூஜஹ்லின் மகன். இவரும் தந்தையைப் போலவே விரோதியாகவே இருந்தார். பத்ருப் போரில் முஸ்லிம்களை எதிர்த்தவர். மக்கா வெற்றியின் போது தப்பி ஓடியவரை, இவர் மனைவி அழைத்து வந்து, பெருமானாரிடம் மன்னிப்புப் பெறச் செய்தார். இக்ரிமா இப்னு அபீஜஹ்ல் என்னும் பெயரால் இவரை அழைப்பதை, இவர் விரும்பவில்லை. பின்னர் இவர் யர்மூக் போரில் வீர மரணம் அடைந்தார்.

இப்னு முகைறா-வலீத் இப்னு முகைறா. இவர் மக்காவில் பிரபலமான மக்ஸூம் கோத்திரத்தில் பிறந்தவர். செல்வமும், செல்வாக்கும் பெற்றவர் இவர். “பெருமானார் சிறந்த நாவன்மை மிக்கவர்” என்று கூறினார். இவருடைய தலைமையில் குறைஷிகள் கூடித்தான் அவர்களைப் பற்றி வெளியூரார் கேட்டால் என்ன கூறுவது என்று முடிவு செய்தனர். இவருடைய பத்து மக்களில் காலித், வலித், ஹிஷாம் ஆகிய மூவரே இஸ்லாத்தைத் தழுவினர்.

உத்பா இப்னு ரபீ ஆ-குவைஷித் தலைவர்களில் ஒருவர். இவருடைய மகள் ஹிந்தாவை அபூஸூப்யான் மணமுடித்திருந்தார். இவருடைய மகன் ஹூதைபா இஸ்லாத்தைத் தழுவியிருந்தார். இவர் குறைஷிகளின் சார்பாக, பெருமானார் அவர்களிடம் சென்று, பொருள், புகழ், பேண



ஆசை காட்டி, மனதைத் திருப்ப முயன்றார். ஆனால், இறுதியில் மனமாற்றத்தோடு திரும்பினார். அதனால், குறைஷிகளின் ஏளனத்துக்கு ஆளானார். முன் ஒரு சமயம் பெருமானாருக்குத் திராட்சைப் பழங்களை அனுப்பி வைத்திருக்கிறார்.

உத்மான் இப்னு அப்பான்-உமைய்யாக் கோத்திரத்தைச் சேர்ந்த ஹல்ரத் உத்மான், பெருமானாரை விட ஆறுவயது இளையவர். பெருஞ் செல்வந்தர். உமறுல் பாரூக் (ரலி) அவர்களுக்குப் பின் கலிபாவானார்கள். நபிகள் பெருமானாரின் திருமகளார் இருவரைத் திருமணம் செய்தவர்கள்.

உத்மான்-வல்ஹாவின் மகன். அவர் மாண்டதும், இவர் கொடி பிடித்தார். ஹம்ஸா வாளால் வீசியதும், இவரும் வீழ்ந்தார்.

உமர்-அதீ கிளையைச் சேர்ந்த கத்தாபின் மகன். அபூஜஹ்லின் பரிசு அறிவிப்பை ஏற்று, நாயகம் அவர்களைக் கொலை செய்ய, உருவிய வாளுடன் சென்றார். வழியில் தம் சகோதரியின் வீட்டுக்குச் சென்று, மனமாற்றம் பெற்றார். பின்னர், பெருமானார் முன்னிலையில் இஸ்லாத்தைத் தழுவினார். அது முதல், இஸ்லாமிய வரலாற்றில் புதுத் திருப்பம் ஏற்படலாயிற்று.

உம்மு அமாரத்-இஸ்லாத்தைத் தழுவிய அன்ஸாரிகளில் ஒருவர். இவரும், இவருடைய கணவரும், இரண்டு ஆண் மக்களும் உஹத், கைபர், ஹுனைன் முதலிய போர்களில் கலந்து வீரப் போர் புரிந்தனர். போரில் காயம் அடைந்தவர்களுக்குத் தண்ணீர் வழங்கி, காயத்துக்குச் சாம்பல் தடவினர். நபிகளாரின் பாராட்டுப் பெற்றவர். இவருடைய குடும்பத்தார் அனைவரும் போரில் வீர மரணம் எய்தினர்.

உம்மு ஹகீம்-இவர் இஸ்லாத்தின் விரோதியாயிருந்த இக்ரிமாவின் மனைவி. தப்பி ஓடிய கணவரை அழைத்து வந்து, பெருமானாரின் மன்னிப்பைப் பெற்றவர்.

உர்வத் இப்னு மஸ்வூத்-இவர் அபூஸூப்யானின் மருகர். தாயிபிலுள்ள தகீப்களின் தலைவர். குறைஷிகளின் சார்பாகப் பெருமானார் அவர்களிடம் தூது போய், அவர்களுக்கு உள்ள

பெருமையை அறிந்து வந்தவர். மக்கா வெற்றிக்குப் பின் மதீனா வந்து இஸ்லாத்தைத் தழுவினார். தம் ஊரான தாயிபுக்குச்சென்று இஸ்லாமியப் பிரச்சாரம் செய்யப் புறப்பட்டார். அவர் உயிருக்கு அபாயம் வருமென்று பெருமானார் தடுத்தார்கள். ஆனால் ஆர்வம் மேலிட்டால், தம் பணியைச் செய்ய தாயிபு சென்றார். அங்கேயே பகைவர்கள் அவரை அம்பெய்திக் கொன்று விட்டனர்.

கஃப் இப்னு மாலிக்-இவர் கஸ்ரஜ் கோத்திரத்தினர். இஸ்லாத்தைத் தழுவியவர். இஸ்லாமியக் கவிஞர்களில், மூன்றாவது இடத்தைப் பெற்றவர். பெருமானார் அவர்களால் சமூகப் பிரஷ்டம் செய்யப்பட்டு வருந்திக் கண்ணீர் வடித்து, பிறகு மன்னிப்புப் பெற்றவர்.

கத்தாப்-குறைஷிகளின் ஒரு முக்கிய கோத்திரமான அதீ கிளையைச் சேர்ந்தவர்.

கதீஜா-மக்காவில் குறைஷி கோத்திரத்தில் தோன்றியவர். பெரும் செல்வந்தர். அவருடைய வியாபாரப் பொருள்களைப் பெருமானார் விற்பனை செய்து இலாபத்தைப் பங்கிட்டுக் கொண்டனர். அவர் இரு முறை திருமணம் செய்து கொண்டு வாழ்க்கை நடத்தினார். முந்திய கணவன்மார்கள் இருவரும் இறந்து விட்டனர். எத்தனையோ குறைஷித் தலைவர்கள் அவரைத் திருமணம் செய்து கொள்ள முன் வந்தனர். அவர் விரும்பவில்லை. நாயகம் அவர்களின் கண்ணியம், நேர்மை, சொல் உறுதி ஆகியவற்றை அறிந்து அவர்களை மணந்து கொண்டார். தம்முடைய செல்வத்தைப் பெருமானார் அவர்களின் பொறுப்பிலே ஒப்படைத்து, வாரி வழங்கினார். இன்முகத்தோடு இல்லறம் நடத்தினார். அவர்களுக்கு காசீம், அப்துல்லாஹ், தாஹிர் ஆகிய மூன்று ஆண் மக்களும், ஸைனப், ருகையா, உம்மு குல்தூம், பாத்திமா ஆகிய நான்கு பெண்மக்களும் பிறந்தனர். ஆண்மக்கள் மூவரும் இளம் பருவத்திலேயே இறந்துவிட்டனர்.பிராட்டியார், பெருமானார் அவர்களுடன் இருபத்தைந்து ஆண்டுகள் வாழ்ந்து, தம் 64-வது வயதில் இறப்பெய்தினர்.

காலித் இப்னு வலீத்-குறைஷிக் குடும்பத்தினர். உஹத் போரில் போர் புரிந்தார். பின்னர், மதீனா சென்று பெருமானார் அவர்களின் கரம் பற்றி இஸ்லாமாகி, மன்னிப்புப் பெற்று, அயல் நாடுகளுக்குத் தலைமை வகித்துச் சென்று வெற்றி பெற்றார். போரைத் தவிர வேறு எதிலுமே கவனம் செலுத்தாதவர்.

ஸபிய்யா நாச்சியார் - நாயகம் அவர்களின் மாமி: ஹம்ஸாவின் தங்கை.

ஸஅத் இப்னு முஆத்-இவர் மதீனாவில் ஒளஸ் கோத்திரத் தலைவர். இஸ்லாத்தைத் தழுவியவர்.யூதர்களுடைய துரோகத்துக்கு வருந்தி, அவர்களுடைய வேதக் கட்டளைையை அனுசரித்து, சமாதானத் தீர்ப்பு வழங்கினார்.

ஸபிஃய்யா-இவர் தந்தை யூதக் கிளையின் தலைவர். கைபர் போரில் இவருடைய தந்தையும் கணவரும் இறந்தனர். ஆதரவற்று இருந்த இவரை, பெருமானார் மணந்து கொண்டனர். இதனால், யூதர்களின் பகைமை மாறும் எனக் கருதினார்கள்.

ஸல்மான் பார்ஸி-இவருடைய தந்தை அக்னியை வணங்குபவர். அவர் கிறிஸ்துவ வணக்க முறையால் கவரப்பட்டார். கிறிஸ்துவப் பாதிரி ஆதரவில் இருந்தார். அவர் இறந்ததும், அவர் கூறியபடி நபிகள் நாயகத்தைத் தேடி வந்தார். வழியில் கல்பிக் கூட்டத்தினர் இவரை, ஒர் யூதரிடம் அடிமையாக விற்று விட்டனர். 300 பேரீச்சம் நாற்றுகளையும், 40 அவுன்ஸ் தங்கத்தையும் பெருமானார் கொடுத்து இவரை மீட்டனர். அகழ்ப் போரில் இவருடைய ஆலோசனைப்படியே அகழ் வெட்டினர். பெருமானார்க்கு இவரிடம் பிரியம் அதிகம்.

ஸைனப் பின்த் ஜஹ்ஷ்-இவர் பெருமானார் அவர்களின் மாமி மகள்: (அதாவது அப்துல் முத்தலிபின் பேத்தி) அடிமையிலிருந்து விடுதலை செய்யப்பட்ட ஸைதுக்குப் பெருமானார் இவரை மணம் செய்து வைத்தனர். ஓர் ஆண்டுக்குப் பின், இவர்கள் மணவாழ்க்கை இன்பகரமாக இல்லாததால், மண விலக்குச் செய்து கொண்டனர். அதன்பின், ஸைனபைப் பெருமானார் அவர்கள் மணந்து கொண்டனர்.

ஸுராக்கா-முழுப்பெயர் ஸுராக்கா இப்னு மாலிக். பெருமானார் அவர்களும், அபூபக்கரும் மக்காவிலிருந்து புறப்பட்டுச் சென்ற போது, பரிசு பெறுவதற்காக அவர்களைத் தேடிச் சென்றவர் இவர். ஹுனைன் போருக்குப் பின்னர் இஸ்லாத்தைத் தழுவினார்.

ஸுபைர் இப்னு அவ்வாம்-இவர் கதீஜா(ரலி) அவர்களின் சகோதரர். அவ்வாமுக்கும் ஸ்பிய்யாவுக்கும் மகனாவார். பல போர்களில் கலந்து கொண்டு வீரப் போர் புரிந்தவர். அபூபக்கர் (ரலி) அவர்களின் மகளார் அஸ்மாவைத் திருமணம் செய்தவர்.

ஸுபைர்-கதிஜாப் பிராட்டியாரின் சகோதரர் மகன். இவர், இருவரை அழைத்துக் கொண்டு கஃபாவுக்குச் சென்று, பகிஷ்கார அறிவிப்பைக் கிழித்தெறிந்து விட்டுப் பெருமானார் முதலானவர்களைப் பள்ளத்தாக்கிலிருந்து மீட்டு வந்தார்.

சுஹைல் இப்னு அம்ரு-இவர் குறைஷித் தலைவர்களில் ஒரு அறிவாளி. பத்ருப் போரில் கலந்து கொண்டு சிறை பிடிக்கப்பட்டு, இழப்புத் தொகை கொடுத்து மீண்டவர். பின்னர், பெருமானார் அவர்களிடம் ஹுதைபிய்யாவில் உடன்படிக்கை செய்து கொள்வதற்காக குறைஷிகளின் சார்பாக வந்த தூதர். பிறகு இவர் இஸ்லாத்தைத் தழுவினார்.

ஸௌதா பின்த் ஸம்ஆ-இவரும், இவர் கணவரும் முஸ்லிமாகி, அபிசீனியா சென்றனர். அங்கே கணவர் இறந்து விட்டார். இவருடைய திக்கற்ற விதவை நிலையைக் கண்டு, பெருமானார் அவர்கள் திருமணம் செய்து கொண்டனர்.

தல்ஹா-குறைஷிகள் அணியில் உஹத் சண்டையில் கொடி பிடித்தவர். அவர் சவால் விட்டதன் காரணமாக, அலியின் வாளுக்கு இரையானார்.

துபைல் இப்னு அம்ர்-மக்காவின் சுற்றுப்புறத்தில் வாழ்ந்து வந்தவர். இவர் மக்காவுக்கு வந்த போது பெருமானார் அவர்கள் ஒதித் தொழுததைக் கேட்டு, உணர்ச்சி மேலிட்டு முஸ்லிமானார்.

பர்ராஸ்-இவர் பனூ ஆமிர் கோத்திரத்தைச் சேர்ந்தவர். நாயகம் அவர்களின் வாக்கு வன்மையைக் கண்டு வியந்து, பகைவர்களை ஒழிக்கத் தாம் துணை புரிந்தால், தமக்குத் தலைமைப் பதவி கிடைக்குமா என பேரம் பேசினார்.

பாத்திமா-நபிகள் நாயகம் அவர்கள்- கதீஜா(ரலி) அவர்களின் அன்பு மகளாவார். இவருக்குப் பல பெயர்கள் உண்டு. சுவர்க்கத்தின் பேரரசி என்று அழைக்கப்பட்டவர். தம் தந்தைக்கு உண்டான இன்னல்களை நேரில் கண்டு வருந்தியவர். இவருடைய 15-வது வயதில் அலிக்கும் இவருக்கும் திருமணம் நிகழ்ந்தது. இருவரும் எளிய வாழ்க்கை நடத்தினர். நாயகம் அவர்களின் பிரிவு தாளாமல், இரவு பகலாக அழுது, ஆறு மாதங்களுக்குப் பிறகு 29-வது வயதில் இறந்துவிட்டார்.

மாரியா கிப்தி-மிஸ்று நாட்டு கிறிஸ்துவ மதத் தலைவர் முகெளகிஸ், பெருமானாருக்குப் பரிசாக அனுப்பி வைத்த இரண்டு பெண்களில் ஒருவரான இவரைப் பெருமானார் மணம் புரிந்து கொண்டனர்.

முத்யிம் இப்னு அதி-இவர் குறைஷிகளில் ஒருவர். இவர் இஸ்லாத்தைத் தழுவவில்லை எனினும், மனிதாபிமான உணர்ச்சியோடு, தம் மக்கள் இருவருடன் சில நாட்கள் பெருமானாருக்குப் பாதுகாப்பாக இருந்தார்.

முஸ் இப்னு உமைர்-இவர் ஹாஷிமின் கொள்ளுப் பேரர். அர்க்கம் இல்லத்தில், பெருமானாரின் இஸ்லாமியப் பிரச்சாரம் நிகழும் போது இவர் இஸ்லாத்தைத் தழுவினார். அது வரை வந்திருந்த திருக்குர்ஆன் வசனங்கள் யாவும், இவருக்கு மனனமாக இருந்தன. யத்ரிபுக்கு, இஸ்லாத்தின் பிரச்சாரத்திற்காக, இவரைப் பெருமானார் அனுப்பி வைத்தார்கள்.

பிஷ்ரு-பெருமானார் அவர்களின் தோழர்களில் ஒருவர். அம்பு எய்வதில் வல்லவர். ஹைபர் போரின் முடிவில், யூதப்பெண் அளித்த விருந்தில் நஞ்சு கலந்த இறைச்சியை உண்டு, உயிர் துறந்தார்.

பிலால்-தொழுகைக்கு அழைப்பொலி முழங்க, முதன்முதலில் நியமிக்கப்பட்டவர். இவர் நீக்ரோ இனத்தவர். இவருடைய தந்தை ரபாஹ். அபிசீனியாவிலிருந்து பிலால் அடிமையாகப் பிடிக்கப்பட்டு மக்காவுக்குக் கொண்டு வரப் பட்டார். மிகவும் துன்புற்றவர். அபூபக்கர்(ரலி) இவரை அடிமைத் தளையிலிருந்து விடுவித்தனர். இவர் இறுதி வரை நாயகம் அவர்கள் ஊழியத்திலேயே இருந்தார்.

புதைல் இப்னு வர்கா-இவர் குலா கூட்டத்தின் தலைவர். பெருமானாரிடம் அபிமானம் கொண்டு குறைஷிகளின் நடவடிக்கைகளை அவ்வப்போது தெரிவித்துக் கொண்டிருந்தவர்.

ஜஃபர்-அபூதாலிப் அவர்களின் மூன்றாவது மகன். அலி அவர்களின் தமையனார். குறைஷிகளின் கொடுமைகளைச் சகியாமல், அபிசீனியாவுக்குச் சென்ற முஸ்லிம்களை, தங்களிடத்தில் ஒப்படைக்க வேண்டும் என்று குறைஷிகளில் சிலர் அபிசீனியா அரசரிடம் சென்று, இஸ்லாத்தைப் பற்றியும், பெருமானாரைப் பற்றியும் கோள் மூட்டினார். அப்பொழுது ஜஃபர் அங்கே சென்று, பெருமானாரின் பெருமையைக் கூறி, எதிரிகளின் சூழ்ச்சிககளை முறியடித்தவர்.

ஜைத் இப்னு ஹாரிதா-கிறிஸ்துவக் குடும்பத்தில் பிறந்தவர். இவர் சிறைப் பிடிக்கப்பட்டு, சிரியாவில் ஹகீம் இப்னு ஹிஷாமிடம் அடிமையாக விற்கப்பட்டார். ஹகீம், தம் மாமி கதீஜா நாச்சியாரிடம் ஜைதை அன்பளிப்பாகக் கொடுத்தார். அவர், பெருமானார் அவர்களிடம் ஊழியத்துக்காக வந்தார். அப்பொழுது அவருக்கு வயது பதினெட்டு. பெருமானார் அவர்கள் அடிமையிலிருந்து அவரை விடுவித்து விட்டனர். அவர் இறுதி வரை பெருமானார் அவர்களுடனேயே இருந்தார். அடிமைகளில் இவரே, முதலாவதாக இஸ்லாத்தைத் தழுவியவர். ஜைதுடைய மகனார் உஸாமா, புகழ் மிக்க இராணுவத் தளபதியாக விளங்கினார்.

ஹம்ஸா-இவர் அப்துல் முத்தலிபின் கடைசி மகன். நாயகம் அவர்களின் சிறிய தந்தை. சிறந்த போர் வீரர். “இஸ்லாமிய சமயச் சிங்கம்” என்ற புகழ் பெற்றவர். உஹத் போரில் உயிர் துறந்தார்.

ஹலிமா-நாயகம் அவர்களுக்குப் பாலூட்டி வளர்த்த செவிலித் தாய்.

ஹப்ஸா நாச்சியார்-இவர் தந்தை உமர்(ரலி). அன்னை ஜைனப். சகோதரர் அப்துல்லாஹ் இப்னு உமர். இவரை முதலில் குனைஸ் குதாபாவுக்கு மணமுடித்தனர். குறைஷிகளின் கொடுமை தாளாது, இருவரும் அபிசீனியா சென்று திரும்பினர். பத்ருப் போரில் குனைஸ் படுகாயம் அடைந்து இறந்தார். அதன் பின், இவரை அண்ணல் நபி அவர்கள் மணந்து கொண்டனர்.

ஹன்லலா இப்னு அபூ ஆபீர்-இவர் அபூ அமீர் மகன். உஹத் போரில் கலந்து, தம் தந்தைக்கு எதிராகப் போர் புரிந்து, எதிரிகள் பலரைக் கொன்றார். பின்னர் இவரும் கொல்லப்பட்டார்.

ஹஸ்ஸான் இப்னு தாபித்-மதீனாவில் பிறந்த சிறந்த கவிஞர். இஸ்லாத்தைத் தழுவி, பெருமானாருக்கு ஒத்துழைப்பு நல்கினார். 120 ஆண்டுகள் வரை வாழ்ந்தார்.

ஹாதிப்-மக்காவின் மீது படையெடுக்க உத்தேசித்திருந்த இரகசியச் செய்தியை ஸாரா என்ற பெண் மூலம் குறைஷிகளுக்கு எழுதி அனுப்பியவர். ஆனால் அது உடனடியாகக் கண்டு பிடிக்கப்பட்டது. பின்னர் பெருமானாரால் இவர் மன்னிக்கப் பெற்றார்.

ஹாரிது-அபூஸுப்யானின் தந்தை. பகைவர்களின் தாக்குதலிலிருந்து பெருமானாரைக் காப்பதற்காக, அவர்களுக்கும் குறைஷிகளுக்கும் மத்தியின் நின்றார். பல பகுதிகளிலிருந்து வீசப்பட்ட கத்திகளினால் தாக்குண்டு உயிர் துறந்தார்.

ஹிந்தா-இவர் இஸ்லாத்தின் கொடிய விரோதியாக இருந்தவர். உத்பா இப்னுராபி ஆவின் மகள், அபூஸூப்யானின் மனைவி. மக்கா வெற்றிக்குப் பின் இஸ்லாத்தைத் தழுவி, பெருமானாரின் பெருந்தன்மையால் மன்னிப்புப் பெற்றவர். முஆவியா இவருடைய மகன்.

ஹிஷாம்-இவர் மிகவும் கெளரவமான ஹாஷிம் கோத்திரத்தாரின் நெருங்கிய உறவினர். குறைஷிகளின் பகிஷ்காரத்தைக் கருதி, இரகசியமாக உணவு, தானியங்கள் முதலியவற்றை நாயகம் அவர்கள் வீட்டுக்கு அனுப்பி வைத்தவர்.

வரக்கா இப்னு நெளபல்-இவர் கதீஜா (ரலி) அவர்களின் ஒன்று விட்ட சகோதரர். இப்ராஹீம் (அலை) அவர்களின் மார்க்கத்தை ஆராய முற்பட்டு, வெற்றி பெறாமல் வேத நூல்களை நன்கு கற்று உணர்ந்து, தூய வாழ்வு வாழ்ந்தவர்.

வஹ்ஷி-இவர் நீக்ரோ அடிமை. தமக்கு விடுதலை கிடைக்கும் என்ற வாக்குறுதியின் பேரில், ஹம்ஸாவைக் கொன்றார். மக்காவைப் பெருமானார் வெற்றி கொண்டதும், தமக்கு மன்னிப்புக் கிடைக்காது என்று தாயிபுக்குத் தப்பி ஓடினார். பின்னர் மதீனா வந்து, பெருமானாரிடம் மன்னிப்புக் கோரினார். அவர் முகத்தை ஏறிட்டுப் பார்க்காமல், பெருமானார் மன்னித்தார்கள்.



*****



நபிகள் நாயகம் அவர்கள் பிறப்பு

☐ மக்காவில் குறைஷி கோத்திரப் பிரமுகர் அப்துல் முத்தலிப் அவர்களுக்குப் பத்து ஆண் மக்கள் பிறந்தனர். அவர்களுள் கடைசி மகன் அப்துல்லாஹ் அவர்கள். இவர்கள் கி.பி.545ம் ஆண்டில் பிறந்தார்கள்.

☐ குறைஷிக் கோத்திரத்தில் பிறந்த உஹைப், யத்ரிப்பிலிருந்து மக்காவுக்குக் குடியேறி வசித்து வந்தனர். அவருடைய அண்ணன் வஹப். அவருக்கு ஒரு மகள் ஆமினா, அழகும் குணநலனும் ஒருங்கே அமைந்தவர்.

☐அந்த ஆமினாவை, தம் மகன் அப்துல்லாஹ்வுக்குத் திருமணம் செய்து வைத்தார் அப்துல் முத்தலிப்.

☐ கி.பி.570-ம் ஆண்டில் அப்துல்லாஹ் இறந்துவிட்டார்.

☐ அப்பொழுது அவருடைய அருமை மனைவி ஆமினா ஆறு மாதக் கர்ப்பவதியாக இருந்தார்.

☐ கி.பி.571-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 20-ந் தேதி, திங்கட்கிழமை ஆமினா நாச்சியார் அழகான ஆண் குழந்தை ஒன்றைப் பெற்றெடுத்தார். (இதற்குச் சரியான அரபு மாதம் ரபீயுல் அவ்வல், பன்னிரண்டாம் தேதி (யானை வருடம்))

☐ தமக்குப் பேரன் பிறந்திருப்பதை அறிந்ததும் பாட்டனார் அப்துல் முத்தலிப் மிகவும் மகிழ்ச்சியுற்றார். உடனே அவர் குழந்தையைக் கஃபாவுக்கு எடுத்துப் போய் நன்றி செலுத்தி இறைவனைத் தொழுதார்.

☐ குழந்தைக்கு 'முஹம்மது' என்று பெயர் சூட்டினார்.

☐ குழந்தையைக் கண்டு மகிழ வந்த உறவினர்கள்,"நம் நாட்டில் இத்தகைய பெயரை யாரும் வைப்பது இல்லையே! நீங்கள் ஏன் உங்கள் பேரக்குழந்தைக்கு ‘முஹம்மது’ என்று பெயர் சூட்டியிருக்கிறீர்கள்” என்று கேட்டனர்.

☐ “என் பேரன் பெருமையும் புகழும் பெற்றுத் திகழவேண்டும் என்பது என் ஆசை. அதனால்தான் அவ்வாறு பெயர் வைத்தேன்” என்றார் அப்துல் முத்தலிப்.

☐ அந்தக் குழந்தை வளர்ந்து பெரியவர்களாகி, நபிகள் நாயகம் ஆனார்கள்.

☐ முஹம்மது என்னும் அரபுச்சொல், புகழுக்கும் பெருமைக்கும் உரியவர் என்னும் பொருளைக் குறிப்பதாகும்.