நபிகள் நாயகம்-சரித்திர நிகழ்ச்சிகள்/விரோதிகளின் பகைமை உணர்ச்சி

72. விரோதிகளின் பகைமை உணர்ச்சி

குறைஷிகள் வந்து தங்களைத் தாக்கக் கூடும் என்பதை பெருமானார் அவர்களும், தோழர்களும் இரவும், பகலும் எதிர் பார்த்துக் கொண்டிருந்தனர்.

பெருமானார் அவர்கள் மதீனாவுக்கு வந்த நாளிலிருந்து, இரவு நேரங்களில் விழித்திருப்பார்கள். தாம் துங்குவதாயிருந்தால், யாரையாவது நியமித்து, விரோதிகளின் வருகையைக் கண்காணித்துக் கொள்ளும்படி ஏற்பாடு செய்து விட்டு அதன் பின்னரே துங்குவார்கள்.

இந்தக் காலகட்டம் இஸ்லாத்துக்கு மிகவும் சோதனை நிறைந்தது விரோதிகள், பெருமானார் அவர்களை மதீனாவை விட்டுத் துரத்தி, இஸ்லாத்தையே அழித்துவி டக் கருதிக் கொண்டிருந்தார்கள்.

குறைஷிகள் தங்களுக்குக் கீழுள்ள கூட்டத்தாரை இஸ்லாத்துக்கு விரோதமாகத் தூண்டி விட்டனர்.

அரேபியர்கள் எல்லோருக்கும் கஃபா பொதுவான வணக்கத் தலமாக இருந்தது. குறைஷிகள் அதன் மேற்பார்வையாளர்களாக இருந்தார்கள். எனவே, குறைஷி புறங்களிலுள்ள அரேபியர்களிடம் அவர்களுக்கு செல்வாக்கு இருந்தது. அதைக் கொண்டு மக்காவிலிருந்து, மதீனா வரையிலுள்ள எல்லாக் கூட்டாத்தார்களையும் முஸ்லிம்களுக்கு விரோதிகளாக்கித் தங்களுடன் சேர்த்துக் கொண்டனர்.