பாஞ்சாலி சபதம்/49. தருமன் தன்னைத்தானே பணயம் வைத்திழத்தல்

49. தருமன் தன்னைத்தானே பணயம் வைத்திழத்தல்

மன்னவர், தம்மை மறந்துபோய், -- வெறி
வாய்ந்த திருடரை யொத்தனர். -- அங்கு
சின்னச் சகுனி சிரிப்புடன் -- இன்னும்
‘செப்புக பந்தயம்வே’றென்றான். -- இவன்
தன்னை மறந்தவ னாதலால் -- தன்னைத்
தான் பணயமென வைத்தனன். -- பின்பு
முன்னைக் கதையன்றி வேறுண்டோ? -- அந்த
மோசச் சகுனி கெலித்தனன். 34
துரியோதனன் சொல்வது