பாஞ்சாலி சபதம்/50. துரியோதனன் சொல்வது

50. துரியோதனன் சொல்வது


பொங்கி யெழுந்து சுயோதனன் -- அங்கு
பூதல மன்னர்க்குச் சொல்லுவான்: -- ‘ஒளி
மங்கி யழிந்தனர் பாண்டவர் -- புவி
மண்டலம் நம்ம தினிக்கண்டீர். -- இவர்
சங்கை யிலாத நிதியெலாம் -- நம்மைச்
சார்ந்தது; வாழ்த்துதிர் மன்னர்காள்! -- இதை
எங்கும் பறையறை வாயடா -- தம்பி!’
என்றது கேட்டுச் சகுனிதான், 35